இது தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியா?

நண்பர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு காணொளியை வெளியிட்டு இருந்தார். அதனை பார்த்த பிறகு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். யார் ஒருவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது என்னுடைய நோக்கம் அல்ல, ஆனால் ஒரு பெரிய பொறுப்பில் உள்ள நபர்கள் போதிய தரவுகளோ, ஆய்வுகளோ இன்றி இவ்வாறு பதிவிடும்போது அதனை சுட்டிக்காண்பித்து அதனை மாற்ற முயற்சிப்பதும், மக்களுக்கு தவறான கருத்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் கருத்துக்களை தகுந்த ஆதாரம் கொண்டு தகர்த்து எறிவது எனது பெரும் பொறுப்பாக உணர்கிறேன்.

கொஞ்சம் வரலாற்றை பேசிவிட்டு நண்பரின் காணொளிக்கு செல்வோம். இந்தியாவிலேயே முதல்முறையாக பாடநூல் கழகம் தமிழக அரசால் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1970 ஆண்டு உருவாக்கப்பட்டது. நீதிக்கட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத்திட்டம், பின்பு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டு பின்னர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டு இன்றளவும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இலவச பேருந்து, இலவச காலணிகள், இலவச நோட்டுப்புத்தகம், இலவச புத்தக பைகள், இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி மற்றும் தற்போது முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் என்று பல சிறப்பான திட்டங்களால் தமிழகம் இன்று கல்வியில் சிறந்து விளங்குகிறது.

ஒரு அரசு ஏன் இவ்வளவு இலவசங்களை கொடுத்து குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்? இதற்க்கு விடை தெரிய ஒரு நூற்றாண்டு பின்னோக்கி செல்லவேண்டும். காலகாலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகம் தான் இது, நாம் இன்று பெரு நகரங்களில் அமர்ந்து கொண்டு யாரு சார் சாதி பாக்குறா என்று நாம் பினாத்திக்கொண்டு இருக்கும் அதே வேலையில் தான் தென்கோடியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் சமைத்த உணவை இடைநிலை சாதியை பெற்றோர்கள் தங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்கள். அந்த பெற்றோர்களை குறை சொல்லி ஒன்றும் இல்லை, காலகாலமாக அவர்களின் மண்டையில் புறையோடிப்போன சாதிய வன்மம் அவ்வாறு அவர்களை செய்யத்தூண்டுகிறது. ஒருவேளை இப்போது உள்ளது போல கல்வி வாய்ப்புகள் அந்த பெற்றோர்களுக்கும் கிடைத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.

ஒரு சமூகம் மட்டுமே பெற்றுவந்த குலக்கல்வியை கிறித்தவ மிஷினெரிக்கள் அனைவருக்குமான பொது கல்வியாக மாற்றின, இந்தியா என்ற கட்டமைப்பு உருவான பின்னர், அடுத்து வந்த அரசுகள் பள்ளிகளை அரசுடைமை ஆக்கின. அப்போதும் பொருளாதாத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களுக்கு கல்வி ஒரு எட்டாத கனியாகவே இருந்தது. பின்னர் இலவசக்கல்வி, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி என பல்வேறு தொலைநோக்கு திட்டங்களினால் தமிழகம் இன்று கல்வியில் தலை நிமிர்ந்து முன்னணி மாநிலமாக நிற்கிறது. இதற்க்கு பெரும் காரணம் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிகள் தான் என்பதை மறுக்க இயலாது.

இரண்டு கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு, உங்கள் காணொளிக்கு வருகிறேன். நீங்கள் உங்கள் சுற்றத்தில் உள்ளதை மட்டுமே பார்த்து இந்த பதிவை இட்டதாக தெரிகிறது. உயர்கல்வி வாசனை கூட தெரியாத பல கிராமங்கள் இன்றும் தமிழகத்தில் இருக்கின்றன, அந்த பள்ளிகளுக்கு சென்று அங்கு படிக்கும் பிள்ளைகளின் முகங்களை பார்த்தால் இப்படி அரசுப்பள்ளிகளை விமர்சிக்கும் எண்ணம் உங்களுக்கு வந்திருக்காது. ஓராசிரியர் பள்ளி, ஒற்றை இலக்க மாறவர்களை கொண்ட பள்ளி என்கிறீர்கள், என்ன செய்யலாம் அந்த பள்ளிகளை முடிவிடலாமா? ஒற்றை இலக்க மாணவர்களுக்காக அவர்களின் கல்விக்காக முனைப்புடன் அவர்களின் எதிர்காலத்திற்காக செயல்படும் அந்த பள்ளிகளை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காமல் இருப்பதே அறம்.

உங்கள் காணொளியில் CBSE பள்ளிகளில் தான் அரசு அதிகாரிகளும், என்னை போன்ற நகரவாசிகளும் தங்களின் பிள்ளைகளை சேர்க்கிறார்கள் என்கிறீர்கள், ஏன் கூடாது? சென்னை வந்த புதிதில் நான் பொது பேருந்தில் தான் அலுவலகம் செல்வேன், பின்பு இருசக்கர வாகனம், இப்போது கார். தேவைக்கும் சொகுசிற்கும் வித்யாசம் உள்ளதல்லவா. நான் அரசுப்பள்ளியில் படித்தேன், என் மகன் தனியார் பள்ளியில் படிக்கிறார், நாளை அவனுடைய குழந்தைகள் வெளிநாடுகளில் கூட படிக்கக்கூடும். இது தான் சமூக பொருளாதார வளர்ச்சி. அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனைக்கு செல்லமாட்டார்களா? அரசு அதிகரிகள் அரசு பள்ளிகளில் சேர்க்க மாட்டார்களா? என்று மொக்கையான வாதத்தை இன்னும் எத்தனை நாட்கள் வைப்பீர்கள். விளிம்பு நிலை மனிதர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் செயல்படும் பொது நிறுவனங்களில் நாமும் போய் உட்கார்ந்து கொண்டால் அது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருநாள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கோ அல்லது அருகில் இல்ல அரசு பள்ளிகளுக்கோ சென்று பாருங்கள் எத்தனை மக்கள் இன்னும் அதனை தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடமாக பார்க்கிறார்கள் என்பது புரியும்.

ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்க்குள், இன்று எப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ சீட்டிற்கு முண்டியடிக்கிறார்களோ அதே போன்று அரசுப்பள்ளிகளில் சேர்க்க முண்டியடிப்பார்கள். அப்போது இந்த CBSE பள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

நன்றி,
ராஜன் விஜயன்

எங்கள் ஊரும் சிலர் பேரும்

எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம், சின்ன பள்ளப்பட்டி கிராமம், அந்தோனியார் தெரு. இது ஒரு தெரு அல்ல எங்கள் ஊரின் பெயரே அந்தோனியார் தெரு தான், அருகில் இருக்கும் AB நகரும் எங்கள் ஊரின் ஒரு அங்கம். தோராயமாக 500 முதல் 600 குடும்பங்கள். பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள், மற்றும் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக இந்துக்கள் வாழும் ஊர். AB நகர் என்பது தோழர் A பாலன் அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட பெயர். முன்பு தோல்பதனிடும் தொழிலாளர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி, ஆழ்ந்த பொதுவுடைமை கொள்ளகைள் வேரூன்றிய பகுதி.

என்னுடைய ஊரின் சிறப்பாக நான் நினைப்பது அங்கு வாழும் சில மனிதர்களின் பெயர்கள் தான், ஒரு சமூகம் எப்படி இப்படி உலக அரசியல் தலைவர்களின் பெயரையும், சிந்தனையியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பெயரையும் கொண்டிருக்க முடியும்? உண்மையாகவே வியப்பாகவும் என் முன்னோர்கள் மீது அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் படுத்தப்பட்ட சமூகம். நன் பேசும் அரசியல் கூட இந்த மரபில் இருந்தே வந்திருக்கக்கூடும்.

சரி அப்படி என்ன அதிசய பெயர்கள்? பார்ப்போம்

என்னுடைய சித்தப்பாவின் பெயர் சாக்ரடீஸ், கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப்புகழ் பெற்ற தத்துவ அறிஞர். இருவரும் இப்போது இல்லை ஆனால் உங்களின் பெயர்கள் எப்போதும் மறையாது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு அண்ணன்கள் ஒருவர் பெயர் காரல் மார்க்ஸ், இன்னொருவர் பெயர் ஏங்கல்ஸ் உலக அரசியலுக்கு கமினியுஸ கொள்கைகளை கொடையாக வழங்கிய மாபெரும் மேதைகள். இவர்களுக்கு ஒரு தம்பி அவரின் பெயர் சூ-என்லாய் சீன குடியரசின் முதல் பிரதமர். என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

என்னுடைய ஒரு தாத்தாவின் பெயர் டாங்கே, இந்திய கம்மிநியூஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவரின் பெயர் (அம்ரித் டாங்கே). இன்னொரு நண்பரின் பெயர் மண்டேலா, அனைவரும் அறிந்த கறுப்பின போராளி. ஒரு அண்ணனின் பெயர் டார்வின் மாபெரும் இயற்க்கை அறிவியலாளர். ஒரு அண்ணனின் பெயர் கென்னடி, அமெரிக்காவின் முன்னால் அதிபர் அவரின் காலத்தில் தான் மனிதன் நிலவில் காலடி வைத்தான்.

நான் வியக்கும் இன்னொரு பெயர் முசோலினி, நம்ப முடிகிறதா உங்களால் ஒரு அண்ணனின் பெயர் முசோலினி என்னோடு அடிக்கடி அரசியல் விவாதம் செய்யும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர். நல்லவர்.

என்னுடைய மாப்பிள்ளையின் மகனின் பெயர் பிடல் காஸ்ட்ரோ. இன்னொரு மாப்பிள்ளையின் பெயர் டென்சிங், எவர்ஸ்ட் சிகரத்தை முதலில் தொட்டவர். இவர்களின் அப்பா அதாவது என்னுடைய சொந்த மாமாவின் பெயர் ரோமியோ, வரலாறுகளில் பேசப்பட்ட ஜூலியட்டின் காதலன். இன்னொரு மாமாவின் பெயர் டயாபாலிக் பிரபல இத்தாலிய கதைகளில் வரும் கதாபாத்திரம்.

ஒரு அண்ணனின் பெயர் கிசிங்கர், நோபல் பரிசுபெற்ற அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர். இன்னொரு அண்ணனின் பெயர் மில்லர், அமெரிக்க முன்னாள் அமைச்சர். அவரின் அண்ணனின் பெயர் ரோஜர், பிரபல எழுத்தாளர் (ரோஜர் மேக்வாக்).

ஜென்னர் இது ஒரு அண்ணனின் பெயர், இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் மேதை. இன்னொரு அண்ணனின் பெயர் கெய்ட்டன் இத்தாலிய அரசியல்வாதி. ஒரு நண்பரின் பெயர் மரடோனா, அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஆட்டக்காரர்.

ஒரு அண்ணனின் பெயர் பிரஸ்னேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர்.

இன்னும் பல பெயர்கள் உள்ளன, லெனின், போர் பியர்ஸ், ஜேம்ஸ், வில்லிங்கர், சார்லஸ், ஜோதி பாஸ், பெத்திலிக், பிலிப், ஹடிபாய்,உமாநாத், வினோபா, ஜார்ஜ், அஜிஜாக்கப், நிப்சன்,எட்வின், நெப்போலியன், ஹென்றி, பிர்லிங்கர், ரொனால்ட் ரீகன், கிளமெண்ட், எட்பேர்க், அலெக்சாண்டர், லியான்டர், பிராங்கிளின், ஆண்ட்ரூ, மாலண்டோ, டிட்டோ, ஜெரோம், குசாக்கி, பிராக்ஸ்டன், லயான், ரிகோரின், ஓனாசிஸ், அந்துவான், கிளிண்டன், சர்ச்சில்.

பெயர்கள் வெறும் பெயர் அல்ல அது ஒரு வரலாற்று ஆவணம், நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடு.

அறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கை

இருமொழிக் கொள்கை பற்றி பேசுவதற்கு முன்பு இந்திய புவியியல் கூறுகளை பற்றி தெரிந்துகொள்வோம். இந்தியா ஒற்றை சமூகமோ ஒரு நாடோ அல்ல, இது ஒரு கூட்டுசமுகம் பல நாடுகளின் ஒன்றியம். உதாரணமாக குஜாரத் ஒரு மாநிலம் என்றாலும் அவர்களுக்கு என்று ஒரு தனி மொழி தனி பண்பாடு உள்ளது, அதே போன்று தான் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா என அனைத்து மாநிலங்களும் மொழிவழியாக பிரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த கூட்டு சமூகமாக இயங்குகிறது.

இந்திய ஒன்றிய அரசின் கணக்கின்படி தோராயமாக 1652 மொழிகளை பேசும் மக்கள் உள்ளனர், அவற்றில் 387 மொழிகள் உயிர்ப்புடன் குறிப்பிடத்தகுந்த அளவு மக்களால் பேசப்படுகின்றன. மேலும் இந்திய ஒன்றிய அரசு அம்மொழிகளின் 22 மொழிகளை அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளாக பட்டியலிட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட 22 மொழிகளை மட்டுமே அங்கீகரித்திருப்பதில் கூட ஒரு மறைமுக அரசியல் உள்ளது. காரணம் சில ஆயிரம் மக்கள் பேசும் சமஸ்கிருத மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் சில லட்சம் மக்கள் பேசும் துளு மொழிக்கு கிடைக்கவில்லை. இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் யார், எந்த கூட்டம் நம் மொழிகளையும் நம் பண்பாட்டையும் தீர்மானிக்க துடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை.

மும்மொழிக்கொள்கை வருவதால் என்ன பிழை? உதாரணமாக மலையாளம் பேசும் உங்கள் உற்றத்தார் அவர்களில் தாய்மொழியை கற்றுக்கொள்ள நாம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது தானே ஜனநாயகம் என்பது உங்கள் கேள்வியாக இருந்தால் உங்களுக்கு அரசியல் தெரியவில்லை அல்லது தெரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் என்று பொருள்.

சரி எப்படி, உனக்கு மட்டும் இந்த மொழி அரசியல் தெரியுமா? என்றால் தெரியும் கண்டிப்பாக தெரியும். என்ன பார்ப்போம்.

இந்ததியாவில் கல்வி என்பது பொதுப்பட்டியல், அதாவது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இனைந்து நிர்வகிக்க கூடிய துறை. இங்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும் உண்டு மாநில அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளும் உண்டு. இங்கு மாநில அரசுகளுக்கு என்று மொழிக்கொள்கைகள் உண்டு ஆனால் ஒன்றிய அரசிற்கு தனியாக மொழிக்கொள்கை இருக்க முடியாது ஆனால் சூழல் அப்படியா இருக்கிறது, மயிரில் தொடங்கி தயிர் வரைக்கும் வலிந்து இந்தியை திணிக்க துடிக்கிறது ஒன்றிய அரசு. அப்படி இருக்க உங்களில் கேள்வி யாரை நோக்கியதாக இருக்கவேண்டும் ஒன்றிய அரசையா? அல்லது மாநில அரசையா? இருக்கட்டும் உங்கள் கேள்வி உள்நோக்கம் இல்லாத பொதுவான கேள்வி என்றே வைத்துக்கொள்வோம் அரசியல் தவிர்த்து எதார்த்த களத்திற்கான பதிலும் உண்டு.

உதாரணமாக நீங்கள் கூறுவது போல தமிழக பள்ளிகளில் (லட்சங்கள் தொடங்கி ஆயிரங்கள் வரை நன்கொடை வாங்கும் தனியார் பள்ளிகள் உட்பட) நீங்கள் முன்மொழியும் மும்மொழிக்கொள்கை சாத்தியமா? 1% கூட சாத்தியம் அல்ல கரணம், தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களில் விகிதாச்சாரம் 70:1 அதாவது 70 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். இதுவே இந்திய ஒன்றியத்க்தின் சராசரி 100:1

ஒரு நகர்ப்புற அரசு தொடக்கப்பள்ளியை எடுத்துக்கொள்வோம், தோராயமாக 200 மாணவர்கள் படிக்கக்கூடும், அதிகபட்சமாக 6 அல்லது 8 ஆசிரியர்கள் என்று வைத்துக்கொண்டாலும், சத்துணவு ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர்கள் போக புத்தக பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 6 பேர். நீங்கள் கூறுவது போல மலையாளம், கன்னடம், தெலுகு போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுக்கு மட்டும் ஆசிரியர்கள் வைத்துக்கொண்டால் கூட புதிதாக 21 ஆசிரியர்கள் சேர்க்க வேண்டும். கிட்டத்தட்ட 250% ஆசிரியர்களை கூடுதலாக பணியமர்த்த வேண்டும். அது சாத்தியமா?

பிறகு ஏன் ஒன்றிய அரசு மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கிறது, அவர்களால் 21 ஆசிரியர்களை அல்ல 2 ஆசிரியர்களை கூட நியமிக்க இயலாது. அவர்கள் மனதில் உள்ள இருவிரலை காட்டி ஒன்றை தொடு என்பது அல்ல ஒரு விரலை காட்டி ஒன்றை தொடு என்பதே. பெரும்பான்மையான மாணவர்கள் இந்தியை தேர்ந்தெடுத்தால் மற்ற மாணவர்களும் வம்படியாக இந்தியை கற்க வேண்டிய சூழல் உருவாகும். இதுதான் அவர்களின் மறைமுக இலக்கு.

சரி இதற்க்கு தீர்வு என்ன? அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் சொன்னது தான், வீட்டில் இரண்டு நாய்கள் வளர்க்கிறோம் ஒன்று பெரியது ஒன்று சிறியது என்றால் நாய்க்கூண்டில் இரண்டு வாயில்கள் வைக்கவேண்டிய அவசியம் இல்லை பெரிய நாய்க்கான வழியிலேயே சிறிய நாயும் சென்று வரும். நாம் வளர்க்கும் பெரிய நாய் தான் ஆங்கிலம், அதைக்கொண்டு உலக மக்களுடன் உரையாடும் போது உள்ளூர் மக்களுக்கும் அதுவே போதும் என்பது தான்.

இது சர்வாதிகாரம் இல்லையா? என் மலையாளம் பேசும் உற்றாருக்கு என்ன பதில் என்றால்? மாநில அரசு மொழி சிறுமான்மையினர் கணிசமாக வாழும் பகுதிகளில் ஓரியண்டல் பள்ளிகளை திறந்துள்ளது உதாரணமாக உருது மொழி பேசும் மக்கள் உள்ள பகுதிகளில் அரசு ஓரியண்டல் பள்ளிகள் இன்னமும் இயங்குகின்றன. இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், தெலுங்கு ஓரியண்டல் பள்ளிகள் என பல தரப்பட்ட மொழிபேசும் மக்கள் பயிலும் பள்ளிகள் நீண்ண்டகாலமாகவே இங்கு இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. தாய்மொழி கற்க விரும்புபவர்கள் அங்கு தங்களில் குழந்தைகளை சேர்க்கலாம்.

மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறில்லை ஆனால் எதார்த்தம் புரியாமல் கேள்விகளை எழுப்பும் உங்களின் உள்நோக்கம் பற்றி சந்தேகம் எழுப்புவது அறிஞர் அண்ணாவின் மாணவனாக என்னுடைய தலையாய கடமை என்பதை உணர்வேன்.

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

மதங்களும் மலங்களும்

மதத்தை போலவே மலங்களிலும் பல வகை உண்டு, சிலர் சில விலங்குகளின் மலத்தை புனிதமாக கருதுவர். சிலர் இயற்க்கை வாழ்வு வாழ்பவர்களின் மலம் துறுநாற்றம் விசுவதில்லை என்பர். என்னை பொறுத்தவரை மலமும் சரி, மதமும் சரி இரண்டுமே கழிவுகள் தான். இரண்டையும் அழித்தாலொழிய அது உரமாக பயன்படாது. அதுவரை அதன் துறுநாற்றம் அனைவரையும் துன்பப்படுத்தும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவை வீசி சென்ற மலம் ஒருவகை,

அதைவிட அருவருப்பான மலம் அதே கிராமத்தில் இரட்டை குவளை முறையில் டீ கடை நடத்திவரும், பேண்ட சாதியினர் மண்டையில் இருக்கும் மலம்.

அதை விட கொடூரமான மலம், தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலில் நுழையவிடாமல் மன வக்கிரத்துடன் சாமியாக நாடகமாடி மனவக்கிரத்தை வார்த்தைகளில் கொட்டி, பின்னர் அதனால் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கும் அந்த பெண்ணின் மண்டையில் உள்ள மலம்.

இதைவிடவும் கேடுகெட்ட மலம் ஒன்று உள்ளது, இந்த சம்பவம் குறித்து பாஜக மற்றும் பாமக கருத்து தெரிவிக்கவில்லை என்றால் புரிந்துகொள்ள முடிகிறது அவை மலக்குழிகள் அதில் ஊறித்திளைக்கும் கட்சிகள் என்று,

ஆனால் இது தான் சமூக நீதியா? இது தான் திராவிட மடாலா? என்று நாளுக்கு நாள் வீதியில் நின்றுகொண்டு தெருவில் அடிபட்ட நாய் போல குறைக்கும் நாம் தம்பிகள் கட்சி சீமான் மண்டையில், மற்றும் நாங்கள் தான் உண்மையான திராவிட கட்சி, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கான கட்சி என்று குட்டிக்கரணம் அடித்துக்கொண்டு இருக்கும் அதிமுக கட்சியின் எடப்பாடி மண்டையில் மற்றும் பண்ணீர் மண்டையில் இருப்பதெல்லாம் கேடுகெட்ட கேவலமான மலம்.

நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் தமிழக காவல்துறைக்கும், இதெற்க்கெல்லாம் மூலகாரணமாக இருந்த திராவிட மாடல் திமுக அரசிற்கும், தொண்டனாக, சக மனிதர்களை மதிக்கும் மனிதனாக நன்றிகள்.

மதம் மனிதனை மிருகமாக்கும், மனித மூளையை மலமாக்கும்

ஆண் – பெண் – மூன்றாம் பாலினத்தவர்

இந்த வார்த்தைகள் எவ்வளவு வன்மத்தை கக்குகிறது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது புரியாது. எப்போதும் ஆணுக்கு தான் முன்னுரிமையா? எந்த விண்ணப்பத்திலாவது பெண் / ஆண் என இருப்பதை உங்கள் வாழ்நாளில் பார்த்ததுண்டா?

என்னை கேட்டால் விண்ணப்பங்களில் அப்படி தேர்வு செய்யும் முறையை விட்டு எழுத்துமூலமாக எழுதும் முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். அல்லது நம் மனக்கிடங்கில் இருக்கும் ஆணாதிக்க மனப்பான்மை நீங்கும் வரையில் பெண் / ஆண் என குறிப்பிடுதல் வேண்டும்.

சரி இப்போது மூன்றாம் பாலினத்தவர், அதாவது ஆணாக பிறந்து தன்னுள் பெண்மையை உணர்ந்து அல்லது புரிந்துகொண்டு பெண்ணாக வாழ்பவர்கள், அதே போன்று பெண்ணாக பிறந்து தனக்குள் இருக்கும் ஆண்மையை புரிந்துகொண்டு ஆண்களாக வாழ்பவர்கள். அவர்களை பொதுவாக நாம் திருநங்கைகள், அல்லது திருநம்பிகள் என்று அழைக்கிறோம். இந்த பெயர்களை கூட பொறுத்துக்கொள்ள முடிகிறது அது என்ன மூன்றாம் பாலினம், அப்படி என்றால் நீங்கள் முதல் இரண்டு பாலினம் என்று சொல்ல வருகிறீர்களா? என்னவகையான மனநிலை இது.

திருநங்கைகளோ, திருநம்பிகளோ தங்களை மூன்றாம் பாலினம் என்று சொல்வதையோ விரும்பமாட்டார்கள், அவர்கள் பெண்கள் அல்லது ஆண்கள் என்று ஒரு பாலினத்தில் வகைப்படுத்தல் சமூக நீதி.

இனிமேலாவது கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லி பழகுவோம் பெண்ணும் ஆணும் சமம் என்று.

அனைவருக்கும் இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

ராஜன் விஜயன்,
மனிதநேயவாதி

பிரியமுடன் பிரியாணி…

நண்பர்களே ஒன்று தெரியுமா? உலகில் ஈகைக்கு என்றே ஒரு திருநாள் உள்ளது என்றால் அது ரம்ஜான் திருநாள் தான். மதங்களை கடந்து அனைவரும் கொண்டாட வேண்டிய விழா இது.

எத்தனையோ பிரியானிகள் இருந்தாலும் ரம்ஜான் பிரியாணியில் மட்டும் தான் இஞ்சி பூண்டுடன் ஈகையும் சேர்த்து சமைக்கப்படுகிறது.

நான் கருப்புசட்டை, எனக்கு ஏசுவானலும் அல்லாவானலும் தேவையில்லாத ஆணி தான். இருந்தாலும், கிடா வெட்டி தன் மதம், சாதிக்குள்ளே சமைத்து சாப்பிடும் கறிசோறை விட, அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும் ரம்ஜான் பிரியானிக்கே சுவை அதிகம்.

அனைத்து இசுலாமிய மற்றும் இசுலாமியர் அல்லாத நண்பர்களுக்கும் ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

கத்தோலிக்க சங்கிகள்

அங்கு காவி இங்கு வெள்ளை அவ்வளவே வித்தியாசம், இங்கு சாதிகள் ஏராளம். சிலர் கேட்க கூடும் இப்பொழுது எல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா அதுவும் கிறிஸ்டியன்ல என்று. கண்டிப்பாக இங்கும் சாதிகள் பார்க்கிறார்கள். சாதி மட்டும் அல்ல நல்ல நேரம், வாஸ்து இன்னும் ஒரு படி மேலே போய் சிலர் ஜாதகம் கூட பார்க்கிறார்கள். ஆனால் சமாதானம் என்கிற வார்த்தையை மட்டும் சொல்லி பூசி மொழுகி விடுகிறார்கள்.

நானும் கலப்பு மனம் தான் செய்தேன் ஆனால் உங்கள் கிறித்தவ மதம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏன்? மாற்று மதத்தினரை திருமணம் செய்ய கூடாது என்று உங்கள் புனித நூலில் எழுதி உள்ளதா? மணமகளை மதம் மாற்றினால் தான் திருமணம் செய்து வைப்போம் என்று சொல்லுகிறார்களே, உங்கள் மதத்திற்கு இப்படி வம்படியாக மாற்றி என்ன செய்ய போகிறீ்கள். எண்ணிக்கையை கூட்டி காட்டவா? எத்தனையோ பெண்கள் உங்கள் மூடதனத்தால் உங்கள் மத வெறியால் பிறந்த வீட்டில் ஒரு பெயரோடும் புகுந்த வீட்டில் ஒரு பெயரொடும் இருக்கிறார்கள். இன்னமும் பல மேரிகள் மாரி அம்மனை தான் வணங்குகிறார்கள்.

என்னுடைய உறவினர் சில மாதங்களுக்கு முன்னர் இறந்து போனார், அவர் இறந்தது சனி கிழமை, அது போதும் ஒரு கோழியை உயிரோடு பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டார்கள். அட அரைகுறை அறிவுள்ள கத்தோலிக்க சமூகமே உங்கள் பரம பிதா இப்படி தான் புதைக்க உங்களுக்கு கற்றுத்தந்தாரா? அந்த கோழியை கொன்று புதைத்தாலும் ஒரு நிமிட வலியோடு போய் இருக்கும். இரக்கம் கெட்ட இவர்கள் தான் ஆண்டவரே இரக்கமாயிரும் என்கிறார்கள். எப்படி இரக்கம் காட்டுவார் உங்கள் ஆண்டவர்.

நற்கருணை – கடவுளின் உடலும், இரத்தமும். இந்த அற்ப உணவு முரட்டு கிறித்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கபடுமாம். மாற்று மதத்தினர் பெற்றால் அது பாவமாம், இந்த கொடுமையை ஒலி பெருக்கி வாயிலாக வேறு சொல்வார்கள். ஒரு மாற்று மதத்தை சேர்ந்தவன் எதற்கு உங்கள் கோவிலுக்கு வர போகிறாள், ஒருவேலை வருகிறான் என்றால் நம்பி வருகிறான் என்று தானே பொருள். அப்படி அவர்களை விளக்கி வைப்பதை உங்கள் இயேசுநாதர் சிலுவையில் தொங்கியபடி பார்த்துக்கொண்டு தானே இருப்பார். முதலில் நற்கருணை வாங்கும் நீங்கள் அனைவரும் மனிதர்களா என்று சோதனை செய்யுங்கள் பிறகு கிறிஸ்தவர்களா என்று ஆராய்ச்சி செய்வோம்.

பாவமன்னிப்பு – உலகில் இது போன்ற ஒரு அயோக்கியத்தனம் வேறு இல்லை. உறுத்தலாக இல்லை, பண்றது எல்லாம் அயோக்கிய தனம் கடைசியாக போய் ஒரு பாவமன்னிப்பு எல்லாம் சரியா போச்சு. அதும் அதை ஆண்டவரிடம் சொல்ல கூடாதாம் பாதிரியாரிடம் தான் சொல்ல வேண்டுமாம். இது எப்படி மனிதனை திருத்தும், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது தான் பாவம் செய்ய தூண்டும்.

திருப்பலி – இதுதான் ஆண்டவர் கற்பித்த முறையா? இது போன்று திருப்பலி நடந்ததாக பைபிளில் ஏதேனும் குறிப்பு உள்ளதா. அவர் எழுந்ததும் நாமும் எழ வேண்டும், அவர் உட்கார்ததும் நாமும் உக்கார வேண்டும். பிறகு அவர் பாட நாம் பாட… இதெல்லாம் ஒரு நாடகமாக தெரியவில்லையா? இதை எல்லாம் சரியாக செய்தால் தான் உங்கள் கடவுள் வருவார் என்றால் அவர் கடவுள் இல்லை கைக்கூலி. கோவில் வாசலில் இருக்கும் பிச்சை காரர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கி கொடுங்கள் திருப்பலி கொடுக்கும் நிம்மதி இதில் அதிகமாய் கிடைக்கும்.

இன்னும் நிறைய மனதினுள் முள்ளாய்,

நல்ல மதம் தானாய் பரவும், நாம் பரப்ப மதம் ஒன்றும் கிருமி அல்ல.

– ஆமென்

குரோம்பேட்டை டூ அண்ணாநகர் அரசியல்.

என்ன இது சென்னை தானா? வீதிக்கு வீதி டாஸ்மாக் இல்லயே, என்று தேடிக்கொண்டே சென்றால் அதோ அந்த மூளையில் ஒன்றே ஒன்று இருக்கிறது, அதுவும் அருகிலேயே காவல் நிலையமாம், எப்படி சரக்கடித்து முடித்துவிட்டு பிரைடு ரைஸ் கடை காரனிடம் சண்டை இழுப்பது என்று புலம்பிகொண்டே நகர்ந்தார் அந்த தமிழக பொருளாதாரத்தில் மீது அக்கறை கொண்ட குடிமகன்.

ஆம் நான் பேசிக்கொண்டு இருப்பது அண்ணா நகரை பற்றி தான். சரி அப்படியே கொஞ்சம் குரோம்பேட்டை பக்கம் வருவோம்.

மூன்று கிலோமீட்டர் சுற்றளவு, 6 டாஸ்மாக் ஒரே ஒரு பொது கழிப்பிடம் அதுவும் வாரம் ஒருமுறை கண்டிப்பாக சுத்தம் செய்வார்கள். ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் ஒன்றாக அமைய பெற்ற எழை மக்களின் சொர்கம். உங்களிடம் 5 ரூபாய் இருந்தால் சேத்துப்பட்டு வரை செல்லலாம், 10 ரூபாய் இருந்தால் செங்கல்பட்டு வரை செல்லலாம். இயற்கையாகவே போக்குவரத்து மிக சிறப்பாக அமைய பெற்ற ஒரு குட்டி சிங்கப்பூர் ( இது எல்லாம் ஓவர் என்பவர்கள் வெள்ளிக்கிழமை பல்லாவரம் சந்தைக்கும் சனிக்கிழமை சரவணா ஸ்டோருக்கும் வரவும் ).

சரி அப்போது அண்ணா நகர் குட்டி சிங்கப்பூர் இல்லையா? என்றால் இல்லை, ஒருக்காலும் இல்லை வேண்டும் என்றான் பெரிய மைலாப்பூர் என்று வேண்டுமானால் சொல்லலாம். மிக நேர்த்தியான தெருக்கள், குப்பைகள் இல்லா குப்பை தொட்டிகள், தடை இல்லா மின்சாரம், ஆள் நடமாட்டமே இல்லா தெருக்கள், டவுசர் போட்டுக்கொண்டு கீரை வாங்க வரும் அங்கில்கள், சேலை கட்டி ரீபொக் சூ போட்டு வாக்கிங் போகும் ஆண்ட்டி கள்.

சரி இதை வைத்து என்ன அரசியல் பேச போகிறாய் என்று கேட்க போகிறீர்களா?

ஆம் இங்கு அறிய வகை எழைகள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் தெருக்களின் பெயர்களை கேளுங்கள், எண்ணிலும் , எழுத்திலும் இருக்கும், தெருக்களுக்கு பெயர் வைக்க கூட அவர்களிடம் தலைவர்கள் இல்லை, அவர்களில் தலைவர்கள் என்று யாரும் இல்லை ஒரு சிலரை தவிர. மேலும் அவர்களுக்கு திராவிட தலைவர்களின் பெயரை தெருக்களுக்கு வைக்க மனமும் வரவில்லை, வராது. ஆம் உருத்த தானே செய்யும். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ராஜாஜி, உவேச, சுப்ரமணியன் (பாரதி).

அப்படியே குரோம்பேட்டை பக்கம் வாருங்கள் இங்கு ராஜாஜி பெயரிலும் தெரு உண்டு, பக்தவச்சலம் பெயரிலும் தெரு உண்டு. சாஸ்திரிக்கும் தெரு உண்டு, காந்திக்கும் தெரு உண்டு, பெரியாருக்கும் ஒரு தெரு, நேருவுக்கும் ஒரு தெரு. 90% தெருக்களின் பெயர் தலைவர்களின் பெயரை தான் தாங்கி நிற்கும். இவ்வாறு தலைவர்களின் பெயரை வைப்பது வெறும் விளம்பரம் அல்ல, அது நன்றி கடன். உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதி அல்லவா, உழைக்கும் மக்கள் ஒருநாளும் நன்றி மறக்கமாட்டார்கள்.

அரியவகை ஏழைகள் அதிகம் வசிக்கும் நடுவங்கரை பகுதிக்கு அண்ணாவின் பெயரை வைத்து நொடிக்கு ஒருமுறை நினைவுபடுத்தியது தான் திராவிட கழகங்களின் ஆக சிறந்த சாதனை. பார்ப்போம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த தெருக்கள் எண்ணயும், எழுத்தயும் சுமந்து நிற்கும் என்று.

தெருக்களின் பெயர் வெறும் பெயர் அல்ல, அது ஒரு வரலாறு, ஒரு நன்றிக்கடன்.

கோனைஸ் 20 ரூபாய்…!!

ஆம் உடலுறவு பற்றி, காம அறிவு பற்றி தந்தையோ, தாயோ நேரடியாக பேச முடியாது. அதற்கு தான் அவர்கள் கோவிலுக்கு செல்லும் போது அந்த சிற்பங்களை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என நம் முன்னோர்கள் அவ்வாறு அமைத்தனர் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே,

இந்த சிற்பம் என்ன சொல்கிறது, ஆணும் பெண்ணும் களவில் ஈடுபடுகிறார்கள், மற்ற இரண்டு பெண்களுக்கும் அங்கு என்ன வேலை?

தயவு செய்து விளக்குங்கள். ஒருவேளை அது அரசன் அவனுக்கு துணையாக அந்தபுற அழகிகள் இருக்கிறார்கள் என்று உன் பதில் வரும் அப்படி என்றால், உன்னை விட்டுவிடு உன் சகோதரியின் கணவன் அல்லது உன் அப்பா இவ்வாறு செய்தால் நீ பொறுத்து கொள்வாயா?

சரி எதாவது விளக்கம் சொல்லி தப்பிக்க முயற்சி செய்வீர்கள். கர்ப்பணயாக துணை நிற்கும் பெண்கள் ஒருவேளை உன் மனைவியாக இருந்தால், உன் அம்மாவாக, உன் தங்கை அக்காவாக இருந்தால் இவ்வாறு தான் கடந்து செல்வாயா?

90 ml என்று ஒரு படம் வந்தது பார்த்து இருக்கிறீர்களா? உண்மையில் அது சமூகம் சார்ந்த படம் ஆனால் அதை அவ்வாறு சொன்னால் பார்க்க மாட்டார்கள் விளம்பரம் தேவை, அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்டது காமம், பெண்கள் கவர்ச்சியாக பேசிக்கொள்ள வேண்டும் அவ்வாறு பேசினால் படத்தில் சிறப்பு காட்சிகள் அதிகம் இருக்கும் என்று அனைவரும்( ஆம் இங்கு அனைவரும் என்பது அனைவரையும் படிக்கும் உங்களையும் ) என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அது அவகளின் நோக்கம் செய்தார்கள். நீங்களும் நாக்கை தொங்க போட்டு கொண்டு தான் பார்த்து இருப்பீர்கள்( நானும் பார்த்தேன்).

ஆனால் பார்ப்பனர்கள் உங்களை திசை திருப்பவே இவ்வாறு செய்தான், நம்ப புடிகிறதா? உங்களால் கருவறைக்குள் செல்ல முடியுமா? நீ என்ன தான் பேண்ட பரம்பரை ஆயினும் நீ அவனுக்கு சூத்திரன். உன்னை கோவிலுக்கு வெளியே சுற்ற வைக்க அவன் செய்த சூழ்ச்சி தான் இந்த வக்கிரமம். இன்று வரை சுற்றிக்கொண்டு தான் இருக்கிறாய்.

காம உணர்ச்சி அனைவருக்கும் இயல்பானது, அதனை புனிதம் என்று நீங்கள் சொல்லும் கோவிலில் வைத்து அதற்கு ஒரு வியாகியானம் பேசுவது தான் நகைச்சுவை.

அகற்றி எறியுங்கள் அந்த அக்கிரமங்களை இளைய தலைமுறைக்கு உங்களை விட அனைத்தும் தெரியும். அப்பறம் இதற்கும் தலைபிற்கும் சம்பந்தம் இல்லை.

பொக்கிஷங்கள்

ஒரு நாள் நானும் என் பையனும் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தோம், அப்போது அவனுக்கு ஏறத்தாழ ஒன்றரை வயது. எழுந்து நடக்க முயலும் பருவம். ஆனால் அப்போதும் கொஞ்சம் துரு துரு என்று தான் இருப்பான்.

ஒளிந்து பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தோம். தவந்து போய் ஒரு அறைக்குள் ஒளிந்துகொண்டு அப்பா அப்பா என்றான். நானும் அவனை தேடுவது போல் தம்பி எங்க காணும் என்று தேடினேன். அவன் ஒளிந்துகொண்டு இருந்த அறையின் கதவு தானியங்கி கதவு உள்ளே சென்று பூட்டிக்கொண்டான். அவனுக்கு திறக்க தெரியவில்லை. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர நானும் பேசிக்கொண்டே சென்றுவிட்டேன். அங்கு அவன் நின்றுகொண்டு அப்பா அப்பா அன்று அழைத்துக்கொண்டு இருந்தான்.

சிறிது நேரத்தில் என் மனைவி என்னிடம் வந்து தம்பி உள்ள மாட்டிக்கொண்ட விசயத்தை சொல்ல ஒரு நிமிடம் படபடப்பு தொற்றிக்கொண்டது. கதவை உள்பக்கமாக தான் திறக்க முடியும், அவன் கதவின் அருகிலேயே நிற்கிறான். சிரித்துகொண்டு இருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அழ ஆரம்பித்தான். கதவை தள்ளி உடைத்து திறக்க முடியாது அவன் கதவின் அருகிலேயே நிற்கிறான். பரபரப்பு பக்கத்து விட்டில் இருந்து கூட வந்து முயற்சி செய்தார்கள். என்ன செய்வது என்றே புரியவில்லை.

ஒரு யோசனை வந்தது. அறையின் பின் புறம் சென்று ஜன்னல் கதவை உடைத்து அவனை என்பக்கமாக அழைத்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம். அவனும் அப்பா என்று ஜன்னலின் பக்கம் வந்தான். பிறகு கதவை உடைத்து திறந்தோம். இதனை இங்கு பகிர்வதற்கு காரணம் விளம்பரம் அல்ல. ஒருவேளை அங்கு அந்த அறையில் ஜன்னல் இல்லாமல் இருந்தால்? அன்று முழுவதும் யாரிடமும் பேசவில்லை தொலைபேசியை அனைத்து விட்டு என் பையனுடன் மட்டுமே இருந்தேன். மீண்டு வர எனக்கு சில நாட்கள் ஆனது.

ஆனால் இன்று… “தம்பி அம்மா இருக்கேன் பயப்டாத தம்பி” என்று அம்மா அழைக்கிறாள் அவனோ “சரிமா” என்கிறான். அந்த குழந்தை நம்பிக்கொண்டு தானே இருந்து இருக்கும். எந்த பெற்றோரும் பிள்ளைகளை காயப்படுத்த வேண்டும் என நினைப்பதில்லை. சில கவன குறைவு தான். இந்த ஒரு மரணம் நமக்கு ஒரு ஆயிரம் பாடத்தை கற்று தந்துவிட்டது. தம்பி சுர்ஜித் மரணம் கடைசி விபத்தாக இருக்க வேண்டும்.

ஒன்றை மனதில் கொள்வோம். வருமுன் காப்பதே சிறந்தது. உங்கள் குழந்தைகள் மீது சபதம் எடுப்போம்.

1. கண்டிப்பாக உனக்காக நேரம் செலவு செய்வேன்.

2. உனக்கு தொலைபேசியை தர மாட்டேன் அதற்கு பதில் உனக்கு புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகள், கிண்டில் போன்ற அறிவு சார்ந்த பொருட்களை வாங்கி கொடுப்பேன்.

3. உன் மீதும் உன் சுற்றுப்புறத்தில் நிகழும் மாற்றத்தின் மீதும் எப்போதும் என் கவனம் இருக்கும்.

4. நம் விட்டின் முகவரியையும் என் தொலைபேசி எண்ணயும் உனக்கு மனப்பாடம் செய்ய வைப்பேன்.

5. உன் நண்பர்களுடனும் தொடர்பில் இருப்பேன்.

6. பருவம், காதல், காமம், இனகவற்சி, மற்றும் உடலின் மாற்ற கூறுகள் தொடர்பாக வெளிப்படையாக பேசுவேன்.

7. உனக்கு என்னிடம் விவாதம் செய்யும் உரிமையை அளிப்பேன்.

8. உன்னை யாரிடமும் ஒப்பிட மாட்டேன்.

9. உன்னிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முயற்சி செய்வேன்.

10. தோல்விகளை தாங்கிக்கொள்ள பயிற்சியும், வெற்றிகளை அடக்கத்தொடு அணுகும் அணுகுமுறையும் உனக்கு கற்றுக் கொடுப்பேன்.

இது உணக்காகவும் உனக்காக வாழும் எனக்காகவும் நான் எடுக்கும் சபதம்.

பிழை இருந்தால் மன்னியுங்கள், இதுதான் இப்போதைய தேவை. குழந்தைகள் பொக்கிஷங்கள். பாதுகாப்போம். பாடம் கற்போம்.