பிரியமுடன் பிரியாணி…

நண்பர்களே ஒன்று தெரியுமா? உலகில் ஈகைக்கு என்றே ஒரு திருநாள் உள்ளது என்றால் அது ரம்ஜான் திருநாள் தான். மதங்களை கடந்து அனைவரும் கொண்டாட வேண்டிய விழா இது.

எத்தனையோ பிரியானிகள் இருந்தாலும் ரம்ஜான் பிரியாணியில் மட்டும் தான் இஞ்சி பூண்டுடன் ஈகையும் சேர்த்து சமைக்கப்படுகிறது.

நான் கருப்புசட்டை, எனக்கு ஏசுவானலும் அல்லாவானலும் தேவையில்லாத ஆணி தான். இருந்தாலும், கிடா வெட்டி தன் மதம், சாதிக்குள்ளே சமைத்து சாப்பிடும் கறிசோறை விட, அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும் ரம்ஜான் பிரியானிக்கே சுவை அதிகம்.

அனைத்து இசுலாமிய மற்றும் இசுலாமியர் அல்லாத நண்பர்களுக்கும் ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply