அண்ணாமலை ஜீ

ஐபிஎஸ் படித்துவிட்டு ஆடு மேய்ப்பது ஒன்றும் பெருமைக்குரிய விஷயமோ, பாராட்டப்பட வேண்டிய சம்பவமோ இல்லை, சரியான திட்டமிடல் இல்லை என்பதன் விளைவு.

நீங்கள் ஆடுமெய்க்கும் எண்ணத்தை முன்னமே திட்டமிட்டு செய்து இருந்தால் இந்நேரம் வேறொரு ஐபிஎஸ் அதிகாரி நமக்கு கிடைத்து இருப்பார். காலம், பயிற்சி, இட ஒதுக்கீடு அனைத்தும் வீண்.

மாரிதாஸ் ஆனாலும், மதன் ஆனாலும், சீமான் ஆனாலும் ஏன் கமலகாசன் ஆனாலும் தமிழகத்தில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்க முதலில் பெரியாரயே பயன்படுத்துவர். மாரி அண்ணன் மட்டும் விதி விலக்கு என்றாலும் அவரும் ஆரம்ப காலத்தில் கம்யூனிச கொள்கையை வைத்தே கடையை ஆரம்பித்தார்.

“மோடியை ஏன் ஆதரிக்கிறேன்”, “ரஜினியின் முதல்வர் வேட்பாளர்” என்று களத்திற்கு வரும் நீங்கள் ஒரு இரண்டு நாளைக்கு சமூக வலைதள கண்டெண்டாக இருக்க முடியுமேதவிர அப்படி ஒன்றும் பெரிய அதிர்வை ஏற்படுத்தி விட முடியாது.

இங்கு ஏற்கனவே விவசாயி மற்றும் விளக்கை காண்பித்து விபூதி அடி வாங்கிய கூட்டமே அதிகம். உங்களை போன்று ஆயிரம் சங்கிகளை பார்த்த மண் இது, மலர் இங்கு ஒருநாளும் மலராது. வழக்கம் போல் மாறுவேடத்தில் வராமல் நேரடியாக சங்கி என்று வெளியே வரும் உங்கள் நேர்மை கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

வாழ்த்துகள்.

Leave a Reply