இது திராவிட மாடல் ஆட்சி

இதுவரை மறைமுகமாக அரசியல் பேசிக்கொண்டு இருந்த தாங்கள் நேரடியாக அரசியல் பேச வந்தமைக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.

நீங்கள் எழுதிய ஞாயிறு கடிதம் சமூகவலைத்தளங்கள் மூலமாக கிடைக்கபெற்றதது. 15/10/2023 அன்று தங்கள் எழுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கைகள் தொடர்பான கடிதத்தில் எனக்கு சில மாற்றுக்கருத்துக்கள் உள்ளது, அதனை மிக்க பணிவுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கட்சி வாரியாக உறுப்பினர்கள் அமர வைக்கப்படுகின்றனர். அதுதான் மரபு அனைவரையும் கலந்து அமர சொல்கிறீர்களா? என்பது எனக்கு தெரியவில்லை. பொதுவாக இடதுசாரிகள், வலதுசாரிகள் என்ற சொற்கள் பேச்சுவழக்கில் உள்ளது, அந்த சொற்களுக்கான காரணமே மக்கள் பிரதிநிதிகளை அவ்வாறு அமர வைப்பதில் இருந்துதான் வந்தது என்று ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்து பேசுகிறீர்கள், ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி, எதிர்க்கட்சி கொறடா போன்ற பதவிகள் உள்ளனவே தவிர எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி அங்கீகரிக்கப்பட்ட பதவி அல்ல. அது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சட்ட மன்றத்திக்கும் அதன் சபாநாயகருக்குமே உள்ளது. நாளை இணை தலைவர், துணை தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று அனைத்து பதவிகளுக்கும் இருக்கை கேட்டால் என்ன செய்வது?

துணைத்தலைவர் இருக்கை விவகாரம் சிக்கல் உள்ளதாய் இருக்கிறது என்கிறீர்கள், அது குறித்து விவாதிப்பதனால் நேரவிரயம் ஆகிறது என்கிறீர்கள். யார் இந்த விவகாரத்தை கிளப்பியது. சட்டமன்றமே இது குறித்து தான் பேசிக்கொண்டு இருப்பது போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள். சென்ற வாரம் இது குறித்து கூட்ட தொடரின் மூன்றாவது நாளில், மாண்புமிகு சட்டமன்ற எதிர்காட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அதில் அவர் கூற வருவது எதிர்க்கட்சி தலைவருக்கான இருக்கை என்பதை தாண்டி அவரின் அருகில் அமர்ந்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னேர்செல்வம் இடமாற்றம் குறித்ததே. அடிப்படை அரசியல் தெரிந்த அனைவரும் இதற்கான காரணத்தை அறிவர். எதிர்க்கட்சி என்பதை ஆளும்கட்சியை வழிநடத்தும் அட்சாணியாக இருக்க வேண்டும் ஆனால் அவர்களின் உட்கட்சி பிரச்சனையை சட்ட மன்றத்தில் தீர்த்துக்கொள்ள நினைப்பது, அது குறித்து வீண் விவாதம் செய்து மன்றத்தின் மாண்பை குலைக்க முயற்சிப்பது முட்டாள்தனம்.

சரி, அது போகட்டும் பள்ளி மாணவர்கள் இருகைகளையும், சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கையையும் ஒப்பிடுகிறீர்கள் இது எப்படி சரி ஆகும். பள்ளி வகுப்பில் அமர்ந்து இருக்கும் மாணவர்கள் பல அணிகளாக இருக்க முடியுமா? அது என்ன விவாத கூடமா? அங்கு மாணவர்கள் கலந்து அமர்வது தான் இயற்க்கை அறம். ஆனால் சட்ட மன்றமோ, நாடாளுமன்றமோ அப்படியா? அங்கே தான் சட்டம் இயற்றப்படும், விவாதங்கள் நடைபெறும் அப்படி இருக்க இருக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உங்களுக்கு தெரியவில்லையா?

மன்றத்தில் உறுப்பினர்கள் பழகுவது குறித்து பேசுகிறீர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சிரித்து பேசிய காரணத்திற்க்காக பதவியை பறித்த இரும்பு பெண்மணிகளை பெற்றுருந்த மன்றம் இது. இந்த ஆட்சியில் தான் எதிர்க்கட்சிகளின் குரல் வெளியே கேட்கிறது அதற்கு காரணம் அண்ணா, கலைஞர் வழிவந்த திராவிட மாடல் ஆட்சி. சட்டமன்றம் உறுப்பினர்கள் பழகுவதற்கான இடம் அல்ல, விவாதிக்கும் இடம், நாட்டில் பழக ஆயிரம் இடங்கள் உள்ளன.

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை அமைக்க சில கூட்டம் துடித்துக்கொண்டு இருக்கையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து அமர சொல்கிறீர்கள். நீங்கள் திமுக மற்றும் அதிமுகவை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று குறிப்பிட்டு இவ்வாறு சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் அவர்களுக்கான இடத்தில் அமரவே இப்படி பஞ்சாயத்தை கூட்டுகிறார்கள் அவர்களா ஆளும்கட்சியுடன் அமரபோகிறார்கள்.

மேலும் உங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆளும்கட்சி எதிர்க்கட்சி அமைப்பு தெரியவில்லை என்று நினைக்கிறேன், காரணம் நம் சட்ட மன்றத்தில் திமுக மட்டுமே ஆளும்கட்சி, மற்ற அனைத்து கட்சிகளும் அதாவது அதிமுக உட்பட காங்கிரஸ், விசிக, பாஜக, முஸ்லீம் லீக், கம்னியூஸ்ட்டுகள் என அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகள் தான் அவர்கள் இப்போதும் கலந்து தான் அமர்கிறார்கள்.

மணிப்பூர் விவகாரம், சிஏஜி ஊழல், ஓபிசி இட ஒதுக்கீடு பிரச்சனை, பெண்களுக்கான போலி இடஒதுக்கீடு நாடகம், கொடநாடு விவகாரம் போன்ற ஆயிரம் விஷயங்கள் நாட்டில் உள்ளன, அவற்றை பற்றி பேசாமல் ஒன்றிற்கும் உதவாத இது போன்ற விவகாரம் குறித்து கடிதங்கள் எழுதி நேரத்தை வீணாக்காமல் ஆக்கப்பூர்வமாக எழுதுங்கள்.

இப்போது மட்டும் அல்ல அண்ணா என்ற ஒரு மாபெரும் அறிஞன் எப்போது எங்கள் மண்ணில் உதித்தானோ அப்போதே மாறிவிட்டது இந்த உலகிற்க்கே முன்மாதிரி சட்டமன்றமாய்.

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.

இது தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியா?

நண்பர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு காணொளியை வெளியிட்டு இருந்தார். அதனை பார்த்த பிறகு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். யார் ஒருவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது என்னுடைய நோக்கம் அல்ல, ஆனால் ஒரு பெரிய பொறுப்பில் உள்ள நபர்கள் போதிய தரவுகளோ, ஆய்வுகளோ இன்றி இவ்வாறு பதிவிடும்போது அதனை சுட்டிக்காண்பித்து அதனை மாற்ற முயற்சிப்பதும், மக்களுக்கு தவறான கருத்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் கருத்துக்களை தகுந்த ஆதாரம் கொண்டு தகர்த்து எறிவது எனது பெரும் பொறுப்பாக உணர்கிறேன்.

கொஞ்சம் வரலாற்றை பேசிவிட்டு நண்பரின் காணொளிக்கு செல்வோம். இந்தியாவிலேயே முதல்முறையாக பாடநூல் கழகம் தமிழக அரசால் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1970 ஆண்டு உருவாக்கப்பட்டது. நீதிக்கட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத்திட்டம், பின்பு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டு பின்னர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டு இன்றளவும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இலவச பேருந்து, இலவச காலணிகள், இலவச நோட்டுப்புத்தகம், இலவச புத்தக பைகள், இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி மற்றும் தற்போது முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் என்று பல சிறப்பான திட்டங்களால் தமிழகம் இன்று கல்வியில் சிறந்து விளங்குகிறது.

ஒரு அரசு ஏன் இவ்வளவு இலவசங்களை கொடுத்து குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்? இதற்க்கு விடை தெரிய ஒரு நூற்றாண்டு பின்னோக்கி செல்லவேண்டும். காலகாலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகம் தான் இது, நாம் இன்று பெரு நகரங்களில் அமர்ந்து கொண்டு யாரு சார் சாதி பாக்குறா என்று நாம் பினாத்திக்கொண்டு இருக்கும் அதே வேலையில் தான் தென்கோடியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் சமைத்த உணவை இடைநிலை சாதியை பெற்றோர்கள் தங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்கள். அந்த பெற்றோர்களை குறை சொல்லி ஒன்றும் இல்லை, காலகாலமாக அவர்களின் மண்டையில் புறையோடிப்போன சாதிய வன்மம் அவ்வாறு அவர்களை செய்யத்தூண்டுகிறது. ஒருவேளை இப்போது உள்ளது போல கல்வி வாய்ப்புகள் அந்த பெற்றோர்களுக்கும் கிடைத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.

ஒரு சமூகம் மட்டுமே பெற்றுவந்த குலக்கல்வியை கிறித்தவ மிஷினெரிக்கள் அனைவருக்குமான பொது கல்வியாக மாற்றின, இந்தியா என்ற கட்டமைப்பு உருவான பின்னர், அடுத்து வந்த அரசுகள் பள்ளிகளை அரசுடைமை ஆக்கின. அப்போதும் பொருளாதாத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களுக்கு கல்வி ஒரு எட்டாத கனியாகவே இருந்தது. பின்னர் இலவசக்கல்வி, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி என பல்வேறு தொலைநோக்கு திட்டங்களினால் தமிழகம் இன்று கல்வியில் தலை நிமிர்ந்து முன்னணி மாநிலமாக நிற்கிறது. இதற்க்கு பெரும் காரணம் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிகள் தான் என்பதை மறுக்க இயலாது.

இரண்டு கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு, உங்கள் காணொளிக்கு வருகிறேன். நீங்கள் உங்கள் சுற்றத்தில் உள்ளதை மட்டுமே பார்த்து இந்த பதிவை இட்டதாக தெரிகிறது. உயர்கல்வி வாசனை கூட தெரியாத பல கிராமங்கள் இன்றும் தமிழகத்தில் இருக்கின்றன, அந்த பள்ளிகளுக்கு சென்று அங்கு படிக்கும் பிள்ளைகளின் முகங்களை பார்த்தால் இப்படி அரசுப்பள்ளிகளை விமர்சிக்கும் எண்ணம் உங்களுக்கு வந்திருக்காது. ஓராசிரியர் பள்ளி, ஒற்றை இலக்க மாறவர்களை கொண்ட பள்ளி என்கிறீர்கள், என்ன செய்யலாம் அந்த பள்ளிகளை முடிவிடலாமா? ஒற்றை இலக்க மாணவர்களுக்காக அவர்களின் கல்விக்காக முனைப்புடன் அவர்களின் எதிர்காலத்திற்காக செயல்படும் அந்த பள்ளிகளை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காமல் இருப்பதே அறம்.

உங்கள் காணொளியில் CBSE பள்ளிகளில் தான் அரசு அதிகாரிகளும், என்னை போன்ற நகரவாசிகளும் தங்களின் பிள்ளைகளை சேர்க்கிறார்கள் என்கிறீர்கள், ஏன் கூடாது? சென்னை வந்த புதிதில் நான் பொது பேருந்தில் தான் அலுவலகம் செல்வேன், பின்பு இருசக்கர வாகனம், இப்போது கார். தேவைக்கும் சொகுசிற்கும் வித்யாசம் உள்ளதல்லவா. நான் அரசுப்பள்ளியில் படித்தேன், என் மகன் தனியார் பள்ளியில் படிக்கிறார், நாளை அவனுடைய குழந்தைகள் வெளிநாடுகளில் கூட படிக்கக்கூடும். இது தான் சமூக பொருளாதார வளர்ச்சி. அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனைக்கு செல்லமாட்டார்களா? அரசு அதிகரிகள் அரசு பள்ளிகளில் சேர்க்க மாட்டார்களா? என்று மொக்கையான வாதத்தை இன்னும் எத்தனை நாட்கள் வைப்பீர்கள். விளிம்பு நிலை மனிதர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் செயல்படும் பொது நிறுவனங்களில் நாமும் போய் உட்கார்ந்து கொண்டால் அது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருநாள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கோ அல்லது அருகில் இல்ல அரசு பள்ளிகளுக்கோ சென்று பாருங்கள் எத்தனை மக்கள் இன்னும் அதனை தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடமாக பார்க்கிறார்கள் என்பது புரியும்.

ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்க்குள், இன்று எப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ சீட்டிற்கு முண்டியடிக்கிறார்களோ அதே போன்று அரசுப்பள்ளிகளில் சேர்க்க முண்டியடிப்பார்கள். அப்போது இந்த CBSE பள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

நன்றி,
ராஜன் விஜயன்

எங்கள் ஊரும் சிலர் பேரும்

எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம், சின்ன பள்ளப்பட்டி கிராமம், அந்தோனியார் தெரு. இது ஒரு தெரு அல்ல எங்கள் ஊரின் பெயரே அந்தோனியார் தெரு தான், அருகில் இருக்கும் AB நகரும் எங்கள் ஊரின் ஒரு அங்கம். தோராயமாக 500 முதல் 600 குடும்பங்கள். பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள், மற்றும் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக இந்துக்கள் வாழும் ஊர். AB நகர் என்பது தோழர் A பாலன் அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட பெயர். முன்பு தோல்பதனிடும் தொழிலாளர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி, ஆழ்ந்த பொதுவுடைமை கொள்ளகைள் வேரூன்றிய பகுதி.

என்னுடைய ஊரின் சிறப்பாக நான் நினைப்பது அங்கு வாழும் சில மனிதர்களின் பெயர்கள் தான், ஒரு சமூகம் எப்படி இப்படி உலக அரசியல் தலைவர்களின் பெயரையும், சிந்தனையியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பெயரையும் கொண்டிருக்க முடியும்? உண்மையாகவே வியப்பாகவும் என் முன்னோர்கள் மீது அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் படுத்தப்பட்ட சமூகம். நன் பேசும் அரசியல் கூட இந்த மரபில் இருந்தே வந்திருக்கக்கூடும்.

சரி அப்படி என்ன அதிசய பெயர்கள்? பார்ப்போம்

என்னுடைய சித்தப்பாவின் பெயர் சாக்ரடீஸ், கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப்புகழ் பெற்ற தத்துவ அறிஞர். இருவரும் இப்போது இல்லை ஆனால் உங்களின் பெயர்கள் எப்போதும் மறையாது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு அண்ணன்கள் ஒருவர் பெயர் காரல் மார்க்ஸ், இன்னொருவர் பெயர் ஏங்கல்ஸ் உலக அரசியலுக்கு கமினியுஸ கொள்கைகளை கொடையாக வழங்கிய மாபெரும் மேதைகள். இவர்களுக்கு ஒரு தம்பி அவரின் பெயர் சூ-என்லாய் சீன குடியரசின் முதல் பிரதமர். என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

என்னுடைய ஒரு தாத்தாவின் பெயர் டாங்கே, இந்திய கம்மிநியூஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவரின் பெயர் (அம்ரித் டாங்கே). இன்னொரு நண்பரின் பெயர் மண்டேலா, அனைவரும் அறிந்த கறுப்பின போராளி. ஒரு அண்ணனின் பெயர் டார்வின் மாபெரும் இயற்க்கை அறிவியலாளர். ஒரு அண்ணனின் பெயர் கென்னடி, அமெரிக்காவின் முன்னால் அதிபர் அவரின் காலத்தில் தான் மனிதன் நிலவில் காலடி வைத்தான்.

நான் வியக்கும் இன்னொரு பெயர் முசோலினி, நம்ப முடிகிறதா உங்களால் ஒரு அண்ணனின் பெயர் முசோலினி என்னோடு அடிக்கடி அரசியல் விவாதம் செய்யும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர். நல்லவர்.

என்னுடைய மாப்பிள்ளையின் மகனின் பெயர் பிடல் காஸ்ட்ரோ. இன்னொரு மாப்பிள்ளையின் பெயர் டென்சிங், எவர்ஸ்ட் சிகரத்தை முதலில் தொட்டவர். இவர்களின் அப்பா அதாவது என்னுடைய சொந்த மாமாவின் பெயர் ரோமியோ, வரலாறுகளில் பேசப்பட்ட ஜூலியட்டின் காதலன். இன்னொரு மாமாவின் பெயர் டயாபாலிக் பிரபல இத்தாலிய கதைகளில் வரும் கதாபாத்திரம்.

ஒரு அண்ணனின் பெயர் கிசிங்கர், நோபல் பரிசுபெற்ற அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர். இன்னொரு அண்ணனின் பெயர் மில்லர், அமெரிக்க முன்னாள் அமைச்சர். அவரின் அண்ணனின் பெயர் ரோஜர், பிரபல எழுத்தாளர் (ரோஜர் மேக்வாக்).

ஜென்னர் இது ஒரு அண்ணனின் பெயர், இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் மேதை. இன்னொரு அண்ணனின் பெயர் கெய்ட்டன் இத்தாலிய அரசியல்வாதி. ஒரு நண்பரின் பெயர் மரடோனா, அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஆட்டக்காரர்.

ஒரு அண்ணனின் பெயர் பிரஸ்னேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர்.

இன்னும் பல பெயர்கள் உள்ளன, லெனின், போர் பியர்ஸ், ஜேம்ஸ், வில்லிங்கர், சார்லஸ், ஜோதி பாஸ், பெத்திலிக், பிலிப், ஹடிபாய்,உமாநாத், வினோபா, ஜார்ஜ், அஜிஜாக்கப், நிப்சன்,எட்வின், நெப்போலியன், ஹென்றி, பிர்லிங்கர், ரொனால்ட் ரீகன், கிளமெண்ட், எட்பேர்க், அலெக்சாண்டர், லியான்டர், பிராங்கிளின், ஆண்ட்ரூ, மாலண்டோ, டிட்டோ, ஜெரோம், குசாக்கி, பிராக்ஸ்டன், லயான், ரிகோரின், ஓனாசிஸ், அந்துவான், கிளிண்டன், சர்ச்சில்.

பெயர்கள் வெறும் பெயர் அல்ல அது ஒரு வரலாற்று ஆவணம், நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடு.

அறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கை

இருமொழிக் கொள்கை பற்றி பேசுவதற்கு முன்பு இந்திய புவியியல் கூறுகளை பற்றி தெரிந்துகொள்வோம். இந்தியா ஒற்றை சமூகமோ ஒரு நாடோ அல்ல, இது ஒரு கூட்டுசமுகம் பல நாடுகளின் ஒன்றியம். உதாரணமாக குஜாரத் ஒரு மாநிலம் என்றாலும் அவர்களுக்கு என்று ஒரு தனி மொழி தனி பண்பாடு உள்ளது, அதே போன்று தான் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா என அனைத்து மாநிலங்களும் மொழிவழியாக பிரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த கூட்டு சமூகமாக இயங்குகிறது.

இந்திய ஒன்றிய அரசின் கணக்கின்படி தோராயமாக 1652 மொழிகளை பேசும் மக்கள் உள்ளனர், அவற்றில் 387 மொழிகள் உயிர்ப்புடன் குறிப்பிடத்தகுந்த அளவு மக்களால் பேசப்படுகின்றன. மேலும் இந்திய ஒன்றிய அரசு அம்மொழிகளின் 22 மொழிகளை அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளாக பட்டியலிட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட 22 மொழிகளை மட்டுமே அங்கீகரித்திருப்பதில் கூட ஒரு மறைமுக அரசியல் உள்ளது. காரணம் சில ஆயிரம் மக்கள் பேசும் சமஸ்கிருத மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் சில லட்சம் மக்கள் பேசும் துளு மொழிக்கு கிடைக்கவில்லை. இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் யார், எந்த கூட்டம் நம் மொழிகளையும் நம் பண்பாட்டையும் தீர்மானிக்க துடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை.

மும்மொழிக்கொள்கை வருவதால் என்ன பிழை? உதாரணமாக மலையாளம் பேசும் உங்கள் உற்றத்தார் அவர்களில் தாய்மொழியை கற்றுக்கொள்ள நாம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது தானே ஜனநாயகம் என்பது உங்கள் கேள்வியாக இருந்தால் உங்களுக்கு அரசியல் தெரியவில்லை அல்லது தெரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் என்று பொருள்.

சரி எப்படி, உனக்கு மட்டும் இந்த மொழி அரசியல் தெரியுமா? என்றால் தெரியும் கண்டிப்பாக தெரியும். என்ன பார்ப்போம்.

இந்ததியாவில் கல்வி என்பது பொதுப்பட்டியல், அதாவது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இனைந்து நிர்வகிக்க கூடிய துறை. இங்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும் உண்டு மாநில அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளும் உண்டு. இங்கு மாநில அரசுகளுக்கு என்று மொழிக்கொள்கைகள் உண்டு ஆனால் ஒன்றிய அரசிற்கு தனியாக மொழிக்கொள்கை இருக்க முடியாது ஆனால் சூழல் அப்படியா இருக்கிறது, மயிரில் தொடங்கி தயிர் வரைக்கும் வலிந்து இந்தியை திணிக்க துடிக்கிறது ஒன்றிய அரசு. அப்படி இருக்க உங்களில் கேள்வி யாரை நோக்கியதாக இருக்கவேண்டும் ஒன்றிய அரசையா? அல்லது மாநில அரசையா? இருக்கட்டும் உங்கள் கேள்வி உள்நோக்கம் இல்லாத பொதுவான கேள்வி என்றே வைத்துக்கொள்வோம் அரசியல் தவிர்த்து எதார்த்த களத்திற்கான பதிலும் உண்டு.

உதாரணமாக நீங்கள் கூறுவது போல தமிழக பள்ளிகளில் (லட்சங்கள் தொடங்கி ஆயிரங்கள் வரை நன்கொடை வாங்கும் தனியார் பள்ளிகள் உட்பட) நீங்கள் முன்மொழியும் மும்மொழிக்கொள்கை சாத்தியமா? 1% கூட சாத்தியம் அல்ல கரணம், தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களில் விகிதாச்சாரம் 70:1 அதாவது 70 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். இதுவே இந்திய ஒன்றியத்க்தின் சராசரி 100:1

ஒரு நகர்ப்புற அரசு தொடக்கப்பள்ளியை எடுத்துக்கொள்வோம், தோராயமாக 200 மாணவர்கள் படிக்கக்கூடும், அதிகபட்சமாக 6 அல்லது 8 ஆசிரியர்கள் என்று வைத்துக்கொண்டாலும், சத்துணவு ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர்கள் போக புத்தக பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 6 பேர். நீங்கள் கூறுவது போல மலையாளம், கன்னடம், தெலுகு போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுக்கு மட்டும் ஆசிரியர்கள் வைத்துக்கொண்டால் கூட புதிதாக 21 ஆசிரியர்கள் சேர்க்க வேண்டும். கிட்டத்தட்ட 250% ஆசிரியர்களை கூடுதலாக பணியமர்த்த வேண்டும். அது சாத்தியமா?

பிறகு ஏன் ஒன்றிய அரசு மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கிறது, அவர்களால் 21 ஆசிரியர்களை அல்ல 2 ஆசிரியர்களை கூட நியமிக்க இயலாது. அவர்கள் மனதில் உள்ள இருவிரலை காட்டி ஒன்றை தொடு என்பது அல்ல ஒரு விரலை காட்டி ஒன்றை தொடு என்பதே. பெரும்பான்மையான மாணவர்கள் இந்தியை தேர்ந்தெடுத்தால் மற்ற மாணவர்களும் வம்படியாக இந்தியை கற்க வேண்டிய சூழல் உருவாகும். இதுதான் அவர்களின் மறைமுக இலக்கு.

சரி இதற்க்கு தீர்வு என்ன? அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் சொன்னது தான், வீட்டில் இரண்டு நாய்கள் வளர்க்கிறோம் ஒன்று பெரியது ஒன்று சிறியது என்றால் நாய்க்கூண்டில் இரண்டு வாயில்கள் வைக்கவேண்டிய அவசியம் இல்லை பெரிய நாய்க்கான வழியிலேயே சிறிய நாயும் சென்று வரும். நாம் வளர்க்கும் பெரிய நாய் தான் ஆங்கிலம், அதைக்கொண்டு உலக மக்களுடன் உரையாடும் போது உள்ளூர் மக்களுக்கும் அதுவே போதும் என்பது தான்.

இது சர்வாதிகாரம் இல்லையா? என் மலையாளம் பேசும் உற்றாருக்கு என்ன பதில் என்றால்? மாநில அரசு மொழி சிறுமான்மையினர் கணிசமாக வாழும் பகுதிகளில் ஓரியண்டல் பள்ளிகளை திறந்துள்ளது உதாரணமாக உருது மொழி பேசும் மக்கள் உள்ள பகுதிகளில் அரசு ஓரியண்டல் பள்ளிகள் இன்னமும் இயங்குகின்றன. இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், தெலுங்கு ஓரியண்டல் பள்ளிகள் என பல தரப்பட்ட மொழிபேசும் மக்கள் பயிலும் பள்ளிகள் நீண்ண்டகாலமாகவே இங்கு இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. தாய்மொழி கற்க விரும்புபவர்கள் அங்கு தங்களில் குழந்தைகளை சேர்க்கலாம்.

மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறில்லை ஆனால் எதார்த்தம் புரியாமல் கேள்விகளை எழுப்பும் உங்களின் உள்நோக்கம் பற்றி சந்தேகம் எழுப்புவது அறிஞர் அண்ணாவின் மாணவனாக என்னுடைய தலையாய கடமை என்பதை உணர்வேன்.

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

மாயப்பேரழகி – குறுந்தொடர் கதை – I

டிஸ்கவரி தமிழ்: பியர்கிரில்ஸ் வாய்ஸில் படிக்கவும்

அன்று ஒருநாள், அந்த கிளிவ் தேசமே அதிர்ச்சியில் உறைந்து இருந்தது. அப்போது தான் பட்டத்தரசிக்கு அந்த தகவல் சொல்லப்பட்டது. நம் மன்னர் ஒரு சிறு புரட்சிப்படையால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் என்று. நொருங்கிப் போனால் அந்த மாயப் பேரழகி.

கிபி எட்டாம் நூற்றாண்டு, தற்போதய ரஷ்யா. அன்று அந்த பேரரசின் பெயர் கிளிவ் தேசம். மன்னன் இல்லாத நாடும், நாட்டு மக்களும் செய்வதறியாது திகைத்துப்போய் இருந்தனர். மன்னனின் மகன் சிறுவன், வேறு வழியின்றி தமாக அரியணையில் ஏறினால் இருபது வயதான ஓல்கா, மன்னனின் கடைசி இளம் மனைவி.

ஓல்கா ஒரு பேரழகி, மன்னனை காதலித்து திருமணம் செய்துகொண்டவள். அவர்களுக்கு ஒரு மகன், அவனுக்கு வயது இரண்டு. என்ன செய்யப்போகிறோம் எப்படி நாட்டை காப்பாற்ற போகிறோம் என்று எதும் தெரியாமல் அரியணையில் அமர்ந்தாள், சுற்றும் சூழ்ச்சிகள், ஆபத்துகள் காலங்கள் ஓடின. ஆனால் அன்று யாருக்கும் தெரியாது இந்த கிளிவ் சாம்ராஜ்ய வரலாறு இந்த ஓல்காவின் பெயரில் இருந்துதான் ஆரம்பம் ஆகும் என்று.

அதற்க்கு முன்பு மன்னன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை தெரிந்துகொள்வோம், இது முன்னர் அதாவது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த மிகக்கொடூரமான கொலைசெய்யும் அல்லது தண்டனை கொடுக்கும் முறை, கைதியாய் அழைத்துவரப்பட்ட மன்னனை ஒரு தளத்தில் படுத்தினார்கள், அவனது இருகைகளையும், இரு கால்களையும் தனித்தனியாக நான்கு குதிரைகளில் கட்டினார்கள். அவை சாதாரண குதிரைகள் அல்ல போரில் அடிபட்ட தாங்கமுடியாத காயத்தை சுமந்து நிற்கும் குதிரைகள். பொதுவாக போர் குதிரைகள் வேகமாக ஓடும், அதுவும் இது அடிபட்ட குதிரை, அடிபட்ட குதிரை எப்படி வேகமாக ஓடும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். போரில் பொதுவாக குதிரைகள் தாக்கப்படுவது இல்லை, ஒருவேளை அது தாக்கப்பட்டால் அது ஓரிடத்தில் போய் நின்றுகொள்ளவும் அதற்க்காக ஒரு முரசு சத்தம் எழுப்பப்படும், அதை கேட்ட உடனே அந்த குதிரைகள் வேகமாக ஓடி தன நாட்டின் இலக்கை அடைந்துவிடும் அதற்காகவே அது பயிற்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

கணைத்துக்கொண்டு அந்த குதிரைகள் அந்த முரசு சத்தத்திற்க்காக காத்திருந்தது. கதறிக்கொண்டு இருந்தான் மன்னன். ஒரு முரசு சத்தம், ஒரே சத்தம், நான்கு புறமும் சீறிப்பாய்தது குதிரைகள். கதை முடிந்தது. உடல் நான்கு கூறுகளானது, உயிர் எந்த கூறில் உள்ளது என்று கூட தெரியவில்லை, ஒரு பேரரசை ஆண்ட மாமன்னனின் அலறல், அழுகையாகி, கூச்சலாகி, அமைதியாகிப்போனது. நான்கு உடல் கூறுகளும் மன்னனின் ஆட்களுக்கு கிடைத்துவிட கூடாது என்பதற்காக தனித்தனியாக தூக்கி வீசியெறிப்பட்டன. வரலாறு அன்றைய நாளை கவனமாக குறித்துக்கொண்டது.

மன்னன் ஏன் இவ்வளவு கொடூரமாக கொல்லப்பட்டான், யார் அந்த புரட்சிப்படை? அவர்களின் நோக்கம் என்ன? என்ன ஆனால் ஓல்கா?

தொடரும்…

மதங்களும் மலங்களும்

மதத்தை போலவே மலங்களிலும் பல வகை உண்டு, சிலர் சில விலங்குகளின் மலத்தை புனிதமாக கருதுவர். சிலர் இயற்க்கை வாழ்வு வாழ்பவர்களின் மலம் துறுநாற்றம் விசுவதில்லை என்பர். என்னை பொறுத்தவரை மலமும் சரி, மதமும் சரி இரண்டுமே கழிவுகள் தான். இரண்டையும் அழித்தாலொழிய அது உரமாக பயன்படாது. அதுவரை அதன் துறுநாற்றம் அனைவரையும் துன்பப்படுத்தும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவை வீசி சென்ற மலம் ஒருவகை,

அதைவிட அருவருப்பான மலம் அதே கிராமத்தில் இரட்டை குவளை முறையில் டீ கடை நடத்திவரும், பேண்ட சாதியினர் மண்டையில் இருக்கும் மலம்.

அதை விட கொடூரமான மலம், தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலில் நுழையவிடாமல் மன வக்கிரத்துடன் சாமியாக நாடகமாடி மனவக்கிரத்தை வார்த்தைகளில் கொட்டி, பின்னர் அதனால் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கும் அந்த பெண்ணின் மண்டையில் உள்ள மலம்.

இதைவிடவும் கேடுகெட்ட மலம் ஒன்று உள்ளது, இந்த சம்பவம் குறித்து பாஜக மற்றும் பாமக கருத்து தெரிவிக்கவில்லை என்றால் புரிந்துகொள்ள முடிகிறது அவை மலக்குழிகள் அதில் ஊறித்திளைக்கும் கட்சிகள் என்று,

ஆனால் இது தான் சமூக நீதியா? இது தான் திராவிட மடாலா? என்று நாளுக்கு நாள் வீதியில் நின்றுகொண்டு தெருவில் அடிபட்ட நாய் போல குறைக்கும் நாம் தம்பிகள் கட்சி சீமான் மண்டையில், மற்றும் நாங்கள் தான் உண்மையான திராவிட கட்சி, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கான கட்சி என்று குட்டிக்கரணம் அடித்துக்கொண்டு இருக்கும் அதிமுக கட்சியின் எடப்பாடி மண்டையில் மற்றும் பண்ணீர் மண்டையில் இருப்பதெல்லாம் கேடுகெட்ட கேவலமான மலம்.

நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் தமிழக காவல்துறைக்கும், இதெற்க்கெல்லாம் மூலகாரணமாக இருந்த திராவிட மாடல் திமுக அரசிற்கும், தொண்டனாக, சக மனிதர்களை மதிக்கும் மனிதனாக நன்றிகள்.

மதம் மனிதனை மிருகமாக்கும், மனித மூளையை மலமாக்கும்

மாயாவி

உற்றாக மிகுதியில் சிலர் ஒருசில கோப்பைகளோடு நிறுத்திக்கொள்வர், ஆனால் நானோ வயிறு போதும் என்றாலும், உடல் சோர்வடைந்தாலும், மூளை தடுமாறினாலும் தொடர்வேன். என்னை என்னால் நிறுத்திக்கொள்ளவே முடியாது.

என் கண்களும், மனமும் எப்போதும் நிறையாது, இன்னும் சிறுது, இன்னும் சிறிது என்று அருந்திக்கொண்டே இருப்பேன்.

நான் சொல்வது மது போதை அல்ல, இருந்தாலும் அது சிலமணி நேரம் மட்டும் தான். இங்கு நான் சொன்னது கண்ணதாசனின் கவிதை என்னும் மாய போதை.

கண்ணதாசன், அவன் ஒரு மாயக்காரன், மனக்கண்ணாடி. நான் மனதில் நினைப்பதை, நான் சொல்ல கூச்சப்படுவதை, என்னால் சொல்லவே முடியாததை ஒலிபெருக்கி போட்டு மேடையில் சொல்கிறான். புத்தகமாய் எழுதி பதிவு செய்கிறான். கவிதை நடையில் பாடலாய் பாடுகிறான்.

இந்த பதிவில் கண்ணதாசனை பற்றித்தான் பேசப்போகிறேன், 20K கிட்ஸ்களே கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

பார்த்துவந்த பத்து பெண்களில் எந்த பெண்ணை பிடித்திருக்கிறது என்றால், பத்து பெண்களையும் பிடித்திருக்கிறது என்றார் பெண்பார்த்துவிட்டு வந்த பின்பு.

நான் கடவுள் இருப்பு பற்றி கவலை கொள்ளாதவன் என்றாலும் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தை படித்துள்ளேன், குற்றவாளி தான் செய்த குற்றத்திற்கு நியாயம் கற்பிப்பது போல, மத சடங்குகளை அதன் சம்பர்தாய முறைகளை, அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு அல்லது புனைவாய் கற்பித்துவிட்டு கவிதை மொழியில் தர்க்கம் செய்திருப்பார் கவிஞர்.

கண்ணதாசனின் அரசியல் வாழ்க்கையை மூன்று கூறுகளாக பிரிக்கலாம்

திராவிட சிந்தனையில் கண்ணாததாசன், தமிழ் தேசிய கண்ணதாசன், தேசிய அரசியலில் கண்ணதாசன். பயப்பட வேண்டாம் இங்கு அரசியல் பேசப்போவது இல்லை. அதை வேறொரு நாள் வைத்துக்கொள்வோம்.

கவிஞர் அவரைப்பற்றி அவரே சொல்லுகிறார்,

“ஒருவனை மலையளவு தூக்கி பின் வலிக்கும் வரை தாக்குவதில் நான் மனிதர்களில் தெய்வ மிருகம், நான் அவர்களுக்கு கொடுத்திருப்பது கத்தியும் கேடயமும், அவர்கள் என்மீதே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்”

என்று பிறகு ஓரிடத்தில் சொன்னார், இனிமேல் வானளவு வாழ்ந்தாலும் மலையளவு தந்தாலும் மனிதரை பாடமாட்டேன் என்று குமுதத்தில் எழுதினார் ஆனால் அடுத்தவாரம் கண்ணதாசன் வெளியிட்ட கவிதையின் தலைப்பு “இந்திரா தான் இந்தியா, இந்தியா தான் இந்திரா” என்பது. முரண்களின் முடிசூடா மன்னன் கண்ணதாசன்.

அண்ணா பற்றி,

“முத்திலே அழகிருக்கும்,

முல்லையில் மனமிருக்கும்,

மொத்தமும் நிறைந்திருக்கும்,

எம் அண்ணா மொழிகின்ற வார்த்தையிலே”

என்பது பின்னர் திமுகவில் இருந்து விலகி தேசிய அரசியலிற்கு போன பின்ன அண்ணாவிற்கு விமர்சனம் செய்ய எழுதிய கவிதையில் தலைப்பு “தோழர் அண்ணாத்துரை பற்றி” என்பது, அண்ணா திண்ணையில் இருந்தாவது தனித்தமிழ்நாடு பெற்றே தீருவேன் என்று முழங்கிய காலம். “திண்ணையில் இருந்து பெற தனித்தமிழ் நாடு என்ன தொன்னையில் நெய்யா?” என்று கேலியும் கிண்டலுமாய் அந்த கவிதை தொடங்கும்.

கண்ணதாசனின் கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்த, என்னை எதிரொலித்த , என்னை நொறுங்கிப்போக வைத்த கவிதை இது

“இருபதே வயதில் என்னை,

இருநூற்றி ஐம்பதாண்டு பருவத்தில் அவன் வைத்தானெனில்,

பார்க்கின்ற அனைத்தும் பார்த்து,

மருவற்ற பெண்கள் கூட்டம் மடியிலே புரண்டு,

நித்தம் ஒருகையில் ஒரு கிண்ணம்,

மறுகையில் ஒரு கண்ணம், உலகத்தை அனுபவிப்பேன்

இறைவனா விடுவான்? இறைவனா விடுவான்?

என்னை இரு காலும் விலங்கு பூட்டி,

குறையுள்ள மனிதனாக்கி,

குரங்குபோல் ஆட்டுவித்து.

முறையாக வயது போக, முதுமையும் நோயும் தந்து,

சிறைவாசம் முடிந்ததை போல்

ஜீவனை முடித்து வைப்பான்”

மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு வாருங்கள்,

இருநூற்றி ஐம்பதாண்டு காலம் வாழ வேண்டுமாம் அதுவும் இருபதே வயதில் வாழவேண்டுமாம். எப்படிப்பட்ட பெண்கள் கூட்டம் மருவற்ற பெண்கள் கூட்டம். ஒரு கையில் ஒரு கிண்ணம் ஒரு கையில் ஒரு கண்ணம் அட அட அட என்று படித்துக்கொண்டே வரும்போது, துக்கத்தில் நடந்து சுவரில் மோதி விழிப்பதை போல அடுத்த வரி தொடங்கும்

இறைவனா விடுவான், இறைவனா விடுவான் என்று. சிறைவாசம் என்பது தான் வாழ்க்கை என்று கவிதை முடியும் போது மனதிற்குள் ஏற்படும் வெறுமையை தவிர்க்கவே முடியவில்லை.

இறந்து 30 ஆண்டுகள்ஆனாலும், இன்னும் முந்நூறு மூவாயிரம் ஆண்டுகள் ஆனாலும், உங்கள் கவிதை எங்கள் உள்ளங்களின் என்றும் வாழும் கவிஞரே.

“போனால் போகட்டும் போடா” என்று இழப்பிலும் மனதை தேற்றிக்கொள்ளும் மனிதர்கள் இருக்கும் வரை, “வாழ நினைத்தால் வாழலாம்” என்று தன்னம்பிக்கை கொண்டு வாழும் மக்கள் இருக்கும் வரை, “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்று துணிவோடு அடுத்த அடி எடுத்துவைக்கும் இளைஞர்கள் இருக்கும் வரையில், “கண்ணே கலைமானே” என்று காதலியை கொஞ்சும் காதலர்கள் இருக்கும்வரை, உங்கள் கவிதைகள் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழும் கவிஞரே வாழும்.

இனிய கிறித்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமா? 

முன்னோர்களே சொன்னாலும் ஒருநாளும் “எண்ணும் எழுத்தும் கண்ணென தகாது” என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மொழி வேறு எழுத்து வேறு என்று உறுதியாக நம்புபவர்களில் நானும் ஒருவன். 

தமிழ் மொழி மீது ஆர்வமும், பற்றும் எப்போதும் உண்டு ஆனால் ஒரு மொழி நான்காயிரம் ஆண்டுகளாக பேசப்படுவதனால் புனிதத் தன்மை அடைந்துவிடும் என்று நம்புவது மூடநம்பிக்கை. நான்காயிரம் ஆண்டுகளாக பேசப்படுவதனால் மூத்த மொழி என்றும், அனைத்து மொழிகளுக்கும் தாய் என்றும் கூறுவதை ஒருநாளும் ஏற்க முடியாது. அது மற்ற மொழிகள் மீது நாம் தொடுக்கும் தாக்குதல், ஆதிக்கம். 

சரி அப்போது தமிழ் இனி மெல்ல சாகும் அதை ஏற்கிறாயா என்றால், அப்படி ஒன்றும் ஆகாது என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை. காரணம் தமிழ் மொழி சந்திக்காத இன்னல்களே இல்லை. நான் இன்னும் நம்புவது தமிழ் மொழியின் இந்த நெகிழும் பண்பை தான். 

உதாரணமாக வேர்ட்பிரஸ் நிரலாக்க மொழி கிட்டத்தட்ட அனைத்து இந்திய பட்டியல் மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு வடிவம் வந்திவிட்டது, நானும் கடந்த 5 ஆண்டுகளாளுக்கு மேலாக தமிழ் மொழி மொழிபெயர்ப்பிற்கு பங்களிப்பு செய்கிறேன், பலரும் செய்கிறார்கள் ஆனால் இன்னமும் தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் வரவில்லை, வராது. 

காரணம் Plugin என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் “சொருகி” ஆனால் சிலர் இந்த வார்த்தை மொழிபெயர்ப்பை ஏற்பது இல்லை நானும் ஏற்பது இல்லை, “பிளகின்” என்றே பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. அனைவருக்கும் எளிமையாக புரியும் என்பதே அதற்க்கான காரணம். இங்கு விவாதிக்க வாய்ப்பு அதிகம், மேலும் உள்ளூர் மொழியை விட உலக மொழியை பயன்படுத்த நாம் தயங்க தேவை இல்லை.

“பேருந்து” என்ற வார்த்தையை பொதுவில் நீங்கள் பயன்படுத்தினால் உங்களை செவ்வாய் கிரக மனிதர்கள் போல பார்ப்பார்கள் மக்கள், அது பிழை அன்று. “பஸ்” என்று அழைக்கலாம் தமிழ் மட்டும் தான் அனைத்து மொழிகளுக்கும் வார்த்தைகளை கடன் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதே ஆதிக்க மனநிலை. தேவைப்படின் கடன் வாங்கலாம் அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி சமஸ்கிருதமாக இருந்தாலும் சரி. அதை தமிழ் மொழியில் எழுதுவோம், தமிழக்குவோம். 

எழுத்தாணி கொண்டு புள்ளி இடாமல், கால் விலங்கு, தும்பிக்கை கொண்டு எழுதிவந்த தமிழ் எழுத்துகளை, நாகரிக சமூகம் இரட்டை கொம்பு, மூன்று சுழி, துணைக்கால் என எளிமை படுத்தியது, அதனால் தான் தமிழ் இன்னமும் நிற்கிறது, மீண்டும் பழமை நோக்கி நகர்வது தமிழை அந்நியப்படுத்துமே அன்றி ஒருநாளும் வளர்க்காது. 

வறண்ட மண்ணும், குளிர்ந்த மனிதர்களும்

இன்று நான் எனது நெருங்கிய நண்பரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன், அது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக மாறிப்போனது.

முன்பு என் நண்பன் எனக்கு போன் செய்த போது திருச்சியில் (மத்திய தமிழ்நாடு நகரம்) திருமணம் என்று சொல்லி என்னை திருமணத்திற்கு அழைத்து இருந்தான், ஆனால் அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது அது திருச்சி இல்லை திருச்சி தாண்டி 20 கிலோமீட்டர் என்று. இந்த வேகமான இயந்திர உலகில் வறண்ட மண்ணின் மனிதர்களும், பொய், கபடம் பேசாத மனிதர்களை மதிக்கும் மனிதர்கள் வாழும் கிராமமும் எனக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

கீழக்கண்ணுகுளம் கிராமம்

ஒவ்வொரு வீட்டிற்கும் இடையே குறைந்தபட்சம் 200 மீட்டர் இடைவெளி இருக்கிறது, 5 கி.மீ.க்கு ஒரு சிறிய கடை. இந்த சூழலில் தான் எனது நண்பர் கடந்த 2 ஆண்டுகளாக இணைய வழியாக வேலைசெய்ததால் என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

எனது நண்பரை அவர் தொழில் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து எனக்குத் தெரியும். ஆனால் அந்தச் சூழலுக்கு அவருடன் சென்றபோதுதான் அவரது சூழ்நிலையை நினைத்து வியந்தேன். அவர் கட்டிய அழகான வீடு, வீட்டில் இருந்து வேலை செய்யும் அமைப்பு, அவருடைய அன்றாட வாழ்க்கை முறை அனைத்தும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. உண்மையில், நான் பொறாமையுடன் திரும்பினேன்.

உங்களால் நம்ப முடிகிறதா, அவர் வசிக்கும் ஏடிஎம்-க்கு செல்ல அவர் 6 கிமீ பயணம் செய்ய வேண்டும், Swiggy, Zomato அவர்களின் அகராதியில் இல்லை. கூகுள் மேப் மூலம் கூட அவர்களின் வாழ்விடத்தை கண்டுபிடிப்பது கடினம்.

இன்று நான் கற்றுக்கொண்டேன்,

  • வாழும் சூழலை மட்டும் விமர்சித்தால் வாழ்க்கையை வெல்ல முடியாது.
  • நாம் வாழும் சூழலை நமக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள கொள்ள வேண்டும்.
  • தொழில்நுட்பம் மட்டும் ஒருவரது வாழ்வில் மகிழ்ச்சியை நிறைவு செய்யாது.
  • கடினமான சூழலில் இருந்து ஒருவர் முன்னேறினால் அது அவரைப் போன்ற மற்றவர்களும் முன்னேற தூண்டுதலாக இருக்கும்.
  • உங்கள் இலக்கை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

உன்னை நினைத்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் நவீன் குமார். உன் இல்லற வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையைப் போலவே சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பல்லாங்குழி

முனைவர் தொ.ப அவர்களின் “பண்பாட்டு அசைவுகள்” நூல் விமர்சனம்

விளையாட்டு என்ற சொல்லை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? இந்த சொல்லில் பொழுதுபோக்கு என்ற பொருள் எங்காவது தொனிக்கிறதா? பொழுதுபோக்கு, பொருளற்றது, ஆழமில்லாதது என்ற பொருளிலேயே அந்த சொல்லை நாம் இப்போது பயன்படுத்தி வருகிறோம். என்ற பளிச் முன்னுரையுடன் தொடங்குகிறார் ஆசிரியர் தொ.ப.

வேட்டை சமூகமாய் வாழ்ந்த மனிதன் மெல்ல முன்னேறி சமூக உயிரினமாக மாறியதற்கு முக்கிய காரணம் விளையாட்டாக கூட இருக்கலாம். விளையாட்டு நம் சமூக விழுமியங்களை எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக பணக்கார விளையாட்டு என்று அறியப்படும் கோல்ப் விளையாட்டை எடுத்துக்கொள்வோம் இந்த விளையாட்டை ஒருவர் ஆட மிகப்பெரிய மைதானம் தேவைப்படுகிறது அதனால் தான் அதனை சாமானியர்களால் ஆட முடியவில்லை. ஆனால் நாம் தெருக்களில் விளையாடும் கோலி குண்டிற்கும் இதற்கும் பெரிய வித்யாசம் ஒன்றும் இல்லை. இரண்டின் நோக்கமும் காய்களை குழிகளில் தள்ளுவதுதான், ஆனால் இந்த சமூகம் என்ன சொல்லி தருகிறது குண்டு விளையாடுவது உதாறித்தனமானது என்று.

இந்த கட்டுரை பல்லாங்குழி விளையாட்டை பற்றி மிக விரிவாக பேசுகிறது. சொல்லப்போனால் இந்த விளையாட்டு சமத்துவம் பேசுகிறது ஆம் அனைவருக்கும் காய்களை சமமாக பிரித்து கொடுத்து விளையாட்டு தொடங்கிகிறது. சூது சில தருணங்களில் நம்மை நிராயுதபாணி ஆக்கும் என்ற உண்மையை பேசுகிறது. தோற்பவன் கையில் ஒன்றுமே இல்லாத போது இந்த விளையாட்டு நிறைவு பெறுகிறது.

ஆரம்பத்தில், விளையாடும் இருவருக்கும் பக்க குழிகள் நீங்கலாக ஆளுக்கு தலா ஏழு குழிகளும், குழிக்கு தலா ஐந்து காய்களும் கொடுக்கப்படும்.

தொடரும்…

ஒரு‌ ‌உண்மை‌ ‌பாகனின்‌ ‌கதை‌ ‌-‌ ‌புத்தக‌ ‌விமர்சனம்‌ ‌

அந்த IFS (Indian Forest Service) அதிகாரிக்கு என்ன பெரிய கொம்பா மோலசுறுக்கு, அர்த ராத்திரி 5 மணிக்கு ஃபோன் பண்ணி கூப்டுறான் அதுவும் இந்த ஊட்டி குளுறுல… என்று புலம்பிக்கொண்டே எழுந்தான் அந்த வன காவலாளி. சில நேரங்களில் மேலதிகாரிகள் மீதுள்ள கோவங்களை நேரடியாக அவர்களிடம் காண்பிக்க இயலாது 🙂 . புலம்பிக்கொண்டு கடைசியாக வனசரக அலுவலகம் வந்தான், அங்கு அந்த காட்டின் வாசனை கூட என்னவென்று தெரியாத மிடுக்கான தேர்வெழுதி மட்டும் வெற்றிபெற்று அதிகாரி ஆன அவரை பார்த்ததும் ஒரு எரிச்சல். என்ன சார் காலைல என்றான்.

இல்ல இங்க ஒரு டாக்டர் இருக்காராம் அவர பாக்கணும், என்ன சார் உடம்பு சரியில்லையா, இல்லபா யானை டாக்டர், ஓ அவரா ஏன் சார் இந்நேரத்தல்… என்று விரியும் இந்த கதை உண்மையில் கதை அல்ல. சோறு சாப்பிடும் போது வாயில் தடைபடும் கல் போல சட்டென்று வேகம் குறைத்து மெல்ல மெல்ல கல்லை எடுக்கும் வித்தை போல மெல்ல மெல்ல படிக்க தூண்டியது.

ஒருமுறை என் மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த்க்கொண்டு இருந்தேன், அப்போது விலங்குகளும் அவை உண்ணும் உணவுகளும் என்ற தலைப்பு, வரிசையாக படிக்கும் போது மாடு என்று வந்தது, சட்டென்று என்பையன் பேப்பர் என்றான். அதாவது அவனுக்கு மாடு காகிதம் தான் உண்ணும் என்று தோன்றி இருக்கிறது காரணம் அவன் நாள்தோறும் இந்த நகரத்து வீதிகளில் அதை தான் பார்க்கிறான். நாம் இந்த உயிரினங்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இழைக்கிறோம். இந்த புத்தகம் நம் இதை பற்றித்தான் விரிகிறது.

இந்த புத்தகம் யானைகளை பற்றி பேசுகிறது அதிலும் யானைக்கு மருத்துவம் பார்க்கும் ஒரு மாமணிதனை பற்றி பேசுகிறது. “டாக்டர் கே” என்று அனைவராலும் அன்போடு அறியப்பட்ட அவர்தான் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இன்றும் மதம் பிடித்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி கட்டுப்படுத்தும் முறையை உலகிற்கும் அறிமுகம் செய்த இந்த மருத்துவரை பற்றி மிக சுருக்கமாக சுவாரசியமாக பேசுகிறது இந்த நூல். எல்லாம் அறிய தகவல், நாம் அறிந்திராத நம் கற்பனைக்கும் எட்டாத யானைகள் பற்றியும், காடுகள் பற்றியுமான தகவல்.

ஒரு யானை ஒருநாளைக்கு 100 முதல் 150 கிலோ உணவு சாப்பிடும், 60 முதல் 80 கிலோமீட்டர் நடக்கும், யானைகள் ஒருநாளும் வலியால் துடித்து பிளிறாது. நீங்கள் பொதுவாக காடுகளுக்கு வார விடுமுறையை களிக்க செல்கிறீர்கள் சும்மாவா செல்கிறீர்கள் போகும்போதே ஒரு கேஸ் பியர், 2 கிலோ கறி கண்டது களியது எடுத்து சென்று காடை நாசம் செய்கிறீர்கள், ஒன்று தெரியுமா நீங்கள் காட்டில் வீசி செல்லும் அந்த ஒற்றை பியர் பாட்டில் யானைகளின் காலில் ஏறினால் என்ன ஆகும் என்று.

60 கிலோமீட்டர் நடக்கும் யானை மெல்ல மெல்ல வேகம் குறைக்கும், 3 டன் எடை கொண்ட யானை காலில் அந்த பியர் பாட்டில் மெல்ல மெல்ல உள்ளே செல்லும், சீழ் பிடிக்கும் வீங்கும், கடைசியாக யானை நடக்க இயலாமல் ஒரு மரத்தின் அடியில் சென்று நின்றுகொள்ளும். தன் கண்முன்னே தான் கால்கள் புழு பிடித்து அழுகுவதை பார்த்து ஒரே ஒருமுறை கண்களை இறுக்கி மூடி மீண்டும் திறக்கும், அது தான் யானைகளின் அதிகபட்ச அழுதல். வினாடிக்கு ஒருமுறை அல்ல அல்ல ஒவ்வொரு முறை சாகும். காடுகளில் இதுபோன்று பல யானைகளின் அழுகிய உடல்களை பார்க்கும் போது மனிதன் எண்ணவகையான மிருகம் என்று யோசிக்க தோன்றும். இவன் காடுகளை ரசிக்க வரவில்லை மாங்காய் துண்டுகளில் மிளகாய் பொடி தடவி குரங்குகளுக்கு கொடுக்கிறான், மலைபாதைகளில் விலங்குகள் குறுக்கே வந்தால் பொறுமை இல்லாமல் அவை எரிச்சல் அடையும் வண்ணம் ஒலி எழுப்புகிறான். ட்ரக்கிங் என்ற பெயரில் துப்பாக்கிகளை, கத்திகளை எடுத்துக்கொண்டு வனவாசம் செல்கிறான். விலங்குகள் இப்படி உன் வாழிடம் வந்தால் விடுவாயா? என்ற ஆழமான அழுத்தமான கேள்விகளை தொடுக்கிறது இந்த புத்தகம்.

விலங்குகள் கம்யூனிஸ்ட்டுகள் அவை தேவைக்கு மீறி உண்பது இல்லை, விலங்குகள் பகுத்தறிவுவாதிகள் அவை மூடநம்பிக்கையில் ஈடுபடுவது இல்லை, விலங்குகள் உலகவாதிகள் தன் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் சென்று நியாயம் கேட்பது இல்லை, விலங்குகள் சகிப்புத்தன்மை கொண்டவை அதனால் தான் நம் ஆட்டுவிற்ப்பு எல்லாம் ஆடுகின்றன. ஆனால் அவை ஒருநாளும் மனிதர்களை போன்று அல்ல இருக்கவும் முடியாது ஏனெனில் அவை தன்னுடைய இனத்தையே அழிக்கும் ஆயுதங்களை தயாரிப்பது இல்லை. மனிதநேயத்தை விடவும் உயிர்நேயம் மிகமுக்கியம் – உணவுச்சங்கிலியோடு இதனை குழப்பிக்கொள்ள வேண்டாம்.

நமக்கு தான் இந்த யானை டாக்டரை பற்றி தெரியாது, அந்த ஊட்டி டாப் ஸ்லீப் பகுதி விலங்குகளுக்கு நன்றாக தெரியும். உலகில் உள்ள பல விலங்குகள் ஆர்வலர்களுக்கும் நன்றாக தெரியும். காடுகளை பற்றி மட்டும் அல்ல யானைகள் பற்றி மட்டும் அல்ல, அந்த அற்புத மாமனிதனை பற்றி அறிந்துகொள்ள படிக்கவேண்டிய புத்தகம் இது.

ஜெயமோகன் எழுதிய “யானை டாக்டர்” – தன்னறம்  வெளியீடு – விலை ரூபாய் 50

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

முப்பதொன்று

என் மனைவிக்காக..

இதுவரை எந்த பிறந்தநாளும் என்னை இந்தவரை பாதித்தது இல்லை, இந்த வருடமே எனக்கு புதிய வருடம் தான். கண்டிப்பாக.

எனக்கு திருமணம் முடித்து கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆனாலும் இந்த வருடத்தை என்னால் மறக்க முடியாது காரணம் என் உயிர் நீ உன்னை முழுமையாய் புரிந்துகொண்டேன், ஆம் உன்னை புரிந்துகொண்டது இந்த வருடத்தில் தான், உணக்குமே சந்தேகம் எலலாம் இப்போது தான் என்னை புரிந்துகொண்டாயா என, ஆம் இப்போது தான்.

எவ்வளவு மாற்றங்கள், நானும் மாறிவிட்டேன், எனக்காக நீயும் மாறிவிட்டாய். இது தான் உண்மையான காதலா என்று யோசிக்க தோன்றுகிறது.

ஒன்று மட்டும் உண்மை, உன்னை உண்மையாக காதலிக்கிறேன், முன்பெல்லாம் சொல்லிய காதல் வார்த்தைகளுக்கும், காதல் கடிதங்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் உனக்கு புரியும். எனக்கு கிடைத்த மிகப்பெரும் சொத்து நீ.

உனக்காக தான் வாழ்கிறேன், உனக்காக மட்டும் தான் வாழ்கிறேன்.

மனைவியை காதலியுங்கள் எல்லையின்றி காதலியுங்கள், ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக காதலியுங்கள், உங்கள் உறவினர்கள் முன்பு அவர்களை விடுக்கொடுக்காதீர்கள். அதை தான் உங்கள் அம்மாவும் விரும்புவார்கள் உங்கள் சகோதரிகளும் விரும்புவார்கள் காரணம் அவர்களும் ஒருவருக்கு மனைவியே.

புதிதாய் பிறக்கிறேன், உனக்காக… மறக்கமுடியாத இன்ப அதிர்ச்சிகளை கண்டிப்பாக நான் எதிர்பார்க்கவில்லை.

காதலுடன் என்றும் உனக்காக, உன் நான். ❤️❤️

ulti’matt

This is a promotional video from Wix, a competitor to WordPress the flagship product of the Automattic. In which the ad is made by directly attacking WordPress. But the WordPress CEO criticize this and shared it directly on his blog. After that, the video was viewed more and more. Definitely need guts for this.

This proverb came to mind I saw it “காய்த்த மரமே கல்லடி படும்!”.

I also learned two lessons from these two,

  1. The goal must be large, while our efforts must be prepared for it, if not it doesn’t work.
  2. If there is real trust in your own product, any kind of situation can be overcome.

Let me tell a kutty stories pay attention listen to me

Story 1. Cadbury Dairy Milk vs Children

“Cadbury” is a confectionery company that has expanded its market by publishing a wide variety of advertisements. It also used a variety of phrases. For example “Kiss me and close your eyes”. However, in those ads they will be handling a subtle strategy let’s see what it is.

In the minds of Indians in general, candy is a food item for children, and those who wanted to change it avoided using children in their advertisements, which gave them great success. Yes, we use Dairy Milk candy arbitrarily for everything from starting a promotion to purchasing a new vehicle. Not only this, Help propose your love too.

This is a great business strategy.

Story – 2. Amazon vs COD

We know Amazon is a global eCommerce company. Launched its sales in India in 2012. However, it could not overtake its existing competitor Flipkart. The company made a huge decision about that.

Today we can not even imagine the eCommerce market without this, yes that is the Cash on the Delivery method (COD). It was introduced to India by Amazon. The company, which is number one in eCommerce today, has bravely taken up a huge decision for its growth.

Story 3. Parachute vs Rats

This is an interesting story. before 10 years, We used to buy oil in tin cans, can you believe it was a rat that had the behind to change it and multiply its business?

The Parachute Company was the first to convert its packing method from Tin cans to plastic and then it had a huge problem with the rat infestation. The reason was that the plastic cans were rectangular in shape so the rats could bite them easily.

In contrast, the parachute implemented a fantastic idea. That’s plastic cans without sharp edges. Rats could not bite those shaped cans This design change brought about a major change in the oil trade.

Story 4. Bata vs Price Tags

When I was in school, Bata shoe advertisements would appear on television and they would put a large sum of money on the price tag, strike it up, put half the price on the page and sell it at a discount. Today it has become a strategy. I hope they just came up with the last big digit way to put the price on products at 99, 999…

Reason, normal psychology. Giving a lower price and buying a higher-priced item. Or a look like that. I can say that it worked really well.

Source: https://www.facebook.com/watch/?v=2705323956258589

ஆண் – பெண் – மூன்றாம் பாலினத்தவர்

இந்த வார்த்தைகள் எவ்வளவு வன்மத்தை கக்குகிறது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது புரியாது. எப்போதும் ஆணுக்கு தான் முன்னுரிமையா? எந்த விண்ணப்பத்திலாவது பெண் / ஆண் என இருப்பதை உங்கள் வாழ்நாளில் பார்த்ததுண்டா?

என்னை கேட்டால் விண்ணப்பங்களில் அப்படி தேர்வு செய்யும் முறையை விட்டு எழுத்துமூலமாக எழுதும் முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். அல்லது நம் மனக்கிடங்கில் இருக்கும் ஆணாதிக்க மனப்பான்மை நீங்கும் வரையில் பெண் / ஆண் என குறிப்பிடுதல் வேண்டும்.

சரி இப்போது மூன்றாம் பாலினத்தவர், அதாவது ஆணாக பிறந்து தன்னுள் பெண்மையை உணர்ந்து அல்லது புரிந்துகொண்டு பெண்ணாக வாழ்பவர்கள், அதே போன்று பெண்ணாக பிறந்து தனக்குள் இருக்கும் ஆண்மையை புரிந்துகொண்டு ஆண்களாக வாழ்பவர்கள். அவர்களை பொதுவாக நாம் திருநங்கைகள், அல்லது திருநம்பிகள் என்று அழைக்கிறோம். இந்த பெயர்களை கூட பொறுத்துக்கொள்ள முடிகிறது அது என்ன மூன்றாம் பாலினம், அப்படி என்றால் நீங்கள் முதல் இரண்டு பாலினம் என்று சொல்ல வருகிறீர்களா? என்னவகையான மனநிலை இது.

திருநங்கைகளோ, திருநம்பிகளோ தங்களை மூன்றாம் பாலினம் என்று சொல்வதையோ விரும்பமாட்டார்கள், அவர்கள் பெண்கள் அல்லது ஆண்கள் என்று ஒரு பாலினத்தில் வகைப்படுத்தல் சமூக நீதி.

இனிமேலாவது கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லி பழகுவோம் பெண்ணும் ஆணும் சமம் என்று.

அனைவருக்கும் இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

ராஜன் விஜயன்,
மனிதநேயவாதி

கற்றதும் பெற்றதும்

அன்று மாலை எப்போதும் போல அலுவலகத்தில் அனைவரும் வேலை பார்த்துக்கொண்டு இருந்தோம், திடீரென ஒரு அறிவிப்பு வந்தது. இன்று முதல் ஒருவாரம் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று. ஐயா ஜாலி என்பது போல தான் இருந்தது. அறிவிப்பு வந்தது தான் மிச்சம் உடன் வேலை செய்யும் பல நண்பர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கட் போட ஆரம்பித்தார்கள். ஒருவகையில் அன்று என் நிறுவனம் எடுத்தது மிக பெரும் முடிவு.

சரியாக எண்ணி ஒரேவாராம் கழித்து அரசு கொரோனா பொது முடக்கத்தை அறிவித்தது முதலில் 14 நாட்கள், பிறகு 21 நாட்கள், ஒரு மாதம், இரண்டு, மூன்று என உண்மையில் இப்போது எத்தனையாவது மாதம் என்றே குழப்பமாக உள்ளது. அன்று எங்கள் நிறுவனம் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக பலபேர் சென்னையில் மாட்டிக்கொண்டு இருந்திருப்போம் காரணம் என் நிறுவனத்தில் மூன்றில் இரண்டு பங்கு வெளியூர்வாசிகள்.

எத்தனை மாற்றங்கள், திரும்பி பார்த்தால் பெருமூச்சு விட தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து அரக்க பறக்க கிளம்பி சென்னை வாகன நெரிசலில், ரயிலில் பிதுங்கி அலுவலகம் சென்று வீடு திரும்புவது ஸ்ஸப்பா…., இன்று நிலைமை தலைகீழ் காலை எழுந்து குரூப்பில் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு தான் பல் விளக்கவே செல்கிறோம். அதே வேலை தான், அதே உழைப்பு தான் ஆனாலும் எவ்வளவு பெரிய மற்றம் எப்படி நாம் இதை தாங்கிக்கொண்டோம்?

ஒரு நாள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமத்திக்க யோசித்த நிறுவனங்கள் பல இன்று நிரந்தரமாகவே தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்கிறார்கள். என்னை பொறுத்தவரை வீட்டில் இருந்து பணி செய்வதால் இதை இழந்தோம் அதை இழந்தோம் என்று சொல்வது பழமை வாதம், உண்மையில் ஜாலியாக தான் உள்ளது. உண்மையாக உங்களின் பணியை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்தால் வீட்டில் இருந்து பணிபுரியும் முறை சொர்கம் தான்.

கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:

  1. நம்மை கண்காணிக்க யாரும் இல்லை என்ற எண்ணம் எப்போதும் இருக்க கூடாது, உங்களின் பணிகள் அதனை வெளிப்படுத்திவிடும்.
  2. நேரம் மிக முக்கியம், பொது கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள், அமர்வுகள் போன்றவற்றில் சரியான அல்லது சில நிமிடங்களுக்கு முன்பாக சென்று கலந்துகொள்ள வேண்டும். உங்களில் நேரத்தை போல மற்றவர்களில் நேரத்தையும் மதித்து நடந்துகொள்ள வேண்டும்.
  3. செய்யும் வேலையை பதிவுசெய்துகொள்ள அல்லது குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அது மற்றவர்களுக்கு புரியும்படி இருந்தால் சிறப்பு.
  4. அனைத்து வேலைகளுக்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும், அதாவது உங்களுக்கு கொடுக்கப்படும் வேலைக்கு நீங்கள் தான் பொறுப்பு உங்களிடம் உங்கள் நிறுவனம் எதிர்பார்ப்பது நாளில் முடிவில் வந்து சொல்லும் தாமத காரணத்தை அல்ல.
  5. உண்மையாக இருக்க வேண்டும், சிலர் எப்போதும் ஆன்லைன்-இல் இருப்பார்கள் அனால் வேலை மட்டும் நடக்காது. இது எல்லாம் எங்கள் தாத்தா காலத்து டெக்னிக். அது சுத்தமாக வேலைக்கு ஆகாது ஒன்றை மனதில் கொள்ளுங்கள் உங்கள் மீது உங்கள் நிறுவனத்திற்கு நம்பிக்கை போய் விட்டால் அதனை மீண்டும் சம்பாதிப்பது மிகவும் கடினம்.
  6. தொடர்பில் இருக்க வேண்டும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறையாவது உங்கள் குழுவினருடனோ அல்லது உங்களோடு பணியாற்றும் நண்பர்களோடு பேசிவிட வேண்டும், நேரில் இருக்கும் போது இது மிக சாதாரணம். இங்கு பலவகையான பிரச்சனைகளுக்கு தொடர்பில்லாமல் இருப்பதே காரணமாகிறது.
  7. உங்கள் விசுவாசத்தை காண்பிக்க வேலை நேரம் இல்லாத நேரங்களில் சக பணியாளர்களை அலுவல் ரீதியாக தொந்தரவு செய்ய கூடாது.
  8. வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும்.

தொடர்ந்து பேசுவோம், இன்னும் எதிர்பார்ப்புகள் வரும் ஆண்டில் வரக்கூடும்.

நான் என்றும் உங்கள் மாணவன் தான்

வேதியியல் ஆய்வு கூடத்திற்கு செல்லும் போது எப்போதும் ஒரு பயம் இருக்கும், ராமானுஜம் சார் என்றாலே ஒரு பீதி இருக்கும் ஆனாலும் அது தேவை தான். அரசுப்பள்ளியில் இவ்வளவு நேர்த்தியான வேதியியல் ஆய்வுக்கூடம் இருக்கும் என்றால் அது உங்களின் ஆய்வுக்கூடம் தான், அது தான் உங்கள் அறை.

நான் பார்க்கும் வேலைக்கும், வேதியியலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றாலும் அந்த அறையில் வேதியியலை தாண்டி சுய ஒழுக்கம் என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டேன் சார். உங்களின் கண்டிப்பு தான் இன்று என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்தது.

இன்றும் ஆசிரியர் என்றால் அனிச்சை செயலாய் உங்கள் முகம் தான் வந்து நிற்கிறது. நீங்கள் வேதியியல் மேதை மட்டும் அல்ல எங்களின் வாழ்வியலின் குரு. உங்களிடம் கற்றதும் பெற்றதும் தான் எங்களை திறம்பட இயங்க வைக்கிறது.

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ராமானுஜம் சார், மீண்டும் சொல்கிறேன் நான் என்றும் உங்கள் மாணவன் தான்

ஜூம் பாமிங் – இணைய தாக்குதல்

அந்த சந்திப்பு மிகவும் நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது, அந்த ஒரு நிமிடம் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. பல முறை கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் அன்று தான் அது எங்களுக்கே நடந்தது. ஜூம் இணையவழி தாக்குதல்.

சென்ற வாரம் வழக்கம் போல சென்னை வேர்ட்பிரஸ் குழுவின் வாராந்திர அமர்வு நடைபெற்றது, எப்போதும் நடைபெறும் அமர்வு போல இல்லாமல் இந்த வாரம் கலந்தாய்வு போல வைத்திருந்தோம். அமர்வு ஆரம்பித்து நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது ஏறக்குறைய 25 பேர் இணைப்பில் இருந்தனர்.

திடீர் என்று இரண்டு நபர்கள் அமர்வின் உள்ளே நுழைந்தார்கள், இணையவழி அமர்வு மேலும் இலவச அமர்வு என்பதனால் யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்கலாம், மிகவும் மும்முரமாக போய்க்கொண்டு இருந்த அமர்வில் ஒருவன் தனது திரையை முன்னறிவிப்பின்றி பகிர்ந்தான், அதில் மிகவும் கீழ்த்தரமான ஆபாச காணொளி ஓடிக்கொண்டு இருந்தது. அமர்வை ஒருங்கிணைத்துக்கொண்டு இருந்த எங்களுக்கு பேரதிர்ச்சி. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதுமட்டும் அல்லாமல் அந்த இருவரும் தொடர்ந்து ஆங்கிலத்தில் அல்லது ஏதோ புரியாத மொழியில் எங்களை ஏளனமாக பேசிக்கொண்டே இருந்தனர். கணநேரத்தில் சுதாரித்துக்கொண்டு அவர்களை அமர்வில் இருந்து நீக்கி விட்டோம்.

இருந்தாலும் எங்களால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர இயலவில்லை. பிறகு எங்களுக்கு நாங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு விருந்தினர்கள், பார்வையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பை கேட்டுவிட்டு தொடர்ந்து அமர்வை நடத்தி முடித்தோம். விருந்தினர்களும் பார்வையாளர்களும் மிகுந்த முதிர்ச்சியோடு இதனை எடுத்துக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் எங்களை சமாதானம் செய்தார்கள் என்றே சொல்லாம்.

ஒருவேளை அந்த அமர்வு குழந்தைகளுக்கானதாகவோ அல்லது குடும்பத்தினருக்கானதாகவோ இருந்திருந்தால் மிகவும் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு இருக்கும். சரி போனது போகட்டும் விசயத்திற்கு வருவோம், அவ்வாறு நடந்தால் என்ன செய்யலாம் அல்லது அவ்வாறு நடைபெறாமல் இருக்க என்ன செய்யலாம்.

இணையம் இன்று உலகை கைக்குள் கொண்டுவந்து விட்டது, வினாடி பொழுதில் கலிபோர்னியாவில் உள்ள என் நண்பரிடம் நான் பேசலாம், ஆஸ்திரேலியா நண்பர்களுக்கு நான் பாடம் நடத்தலாம். அனைத்தும் இணையத்தில் சாத்தியம் ஆனாலும் சில பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகள் மிகவும் இன்றியமையாதது.

  1. அமர்வை இணையவெளியில் நடத்த முதலில் என்ன பொறியை பயன்படுத்த போகிறோம் என்றும் அதில் பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன உள்ளது என்றும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  2. ஜூம் பொறி மூலம் நடத்தினால் அதில் அனைவரும் திரையை பகிரும் வசதியை கண்டிப்பாக நிறுத்தி வைக்க வேண்டும். யார் பேச்சாளரோ அவர் மட்டும் திரையை பகிருமாறு அமைப்பை உறுதிப்படுத்தி வைக்க வேண்டும்.
  3. கூகிள் மீட் என்றால் கண்டிப்பாக யார் வேண்டுமானாலும் அழைப்பில்லாமல் உள்ளே வருவதை நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.
  4. தனியாக ஒருவரையோ அல்லது ஒரு குழுவையோ அமைத்து பார்வையாளர்களை கண்காணிக்க வேண்டும். அரட்டை பெட்டியிலும் இதுபோன்ற தேவையில்லாத கருத்துகள் பகிரப்படலாம் ஆகவே அதையும் கவனமாக கண்காணிக்க வேண்டும்
  5. சரி ஒருவேளை நாம் அனைத்தையும் செய்தும் யாரேனும் இப்படி ஆபாச காணொளி அல்லது வேறு ஏதேனும் தேவையில்லாத கருத்தை பகிர்த்தால் முதலில் பதட்டம் அடைய கூடாது. அவர்களின் நோக்கம் பெரும்பாலும் நமக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதே, நாம் பதட்டம் அடைத்தால் அவர்களுக்கு அது சாதகமாக போய் விடும்.
  6. பொறுமையாக அல்லது சிரித்துக்கொண்டே பார்வையாளர்கள் மற்றும் பேச்சாளரிடம் மன்னிப்பை கேட்டு, இது இயல்பு தான் இது போன்று வேலை இல்லாதே நபர்கள் இப்படி தான் செய்வார்கள் என்று கூறிக்கொண்டே அவர்களை பிளாக் செய்ய வேண்டும்.
  7. அவர்கள் மீண்டும் இடையிறு ஏற்படுத்த வேறு பெயரில் வந்து முயலலாம் ஆகவே மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

உலகம் மிகவும் சிறிது தான், இணையம் அதை இன்னும் சிறிதாக்கி விட்டது. அனைத்திற்கும் ஒரு தீர்வு உண்டு. கவனமுடனும் பாதுகாப்போடும் இணையவழி அமர்வுகளை நடத்துவோம், வல்லவனுக்கு வல்லவவன் வரத்தான் செய்வான்

அப்படி என்ன உள்ளது WordPress 5.5 பதிப்பில்?

இன்னும் சிலதினங்களில் (ஆகஸ்ட் 11, 2020) வெளியாகவுள்ள WordPress 5.5 பதிப்பில் அநேகமான புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை என்ன என்று கீழே காண்போம்.

Editor ல் பல புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஐகான்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பழைய பதிப்புகளை விட எளிமையாக்கப்பட்ட எடிட்டராக உள்ளது. அநேகமாக எடிட்டரில் அதிகமான மாற்றங்களை கொண்ட பதிப்பு இதுவாகும். படங்களை எளிமையான முறையில் எடிட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.

Auto Update என்னும் புதிய பயனுள்ள வசதி தரப்பட்டுள்ளது. இதன்முலம் Plugin மற்றும் Theme ஆகியவற்றை தாமாக புதுப்பிக்கும் வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். (ஒருவேளை அவ்வாறு தானியங்கி புதுப்பித்தல் செய்யும் போது வலை தளம் முடங்க வாய்ப்பு உள்ளது)

இனி Plugin மற்றும் Theme ஆகியவற்றில் Updated பாதிப்புகளை zip முறையில் பதிவேற்றம் செய்யலாம் இதுவும் மிக பயனளிக்க கூடிய வசதி ஆகும்.

அனைத்து Image களிலும் லெஸி லோட் செய்யும் அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது தளத்தில் வேகத்தை அதிகரிக்க உதவும்.

அண்ணாமலை ஜீ

ஐபிஎஸ் படித்துவிட்டு ஆடு மேய்ப்பது ஒன்றும் பெருமைக்குரிய விஷயமோ, பாராட்டப்பட வேண்டிய சம்பவமோ இல்லை, சரியான திட்டமிடல் இல்லை என்பதன் விளைவு.

நீங்கள் ஆடுமெய்க்கும் எண்ணத்தை முன்னமே திட்டமிட்டு செய்து இருந்தால் இந்நேரம் வேறொரு ஐபிஎஸ் அதிகாரி நமக்கு கிடைத்து இருப்பார். காலம், பயிற்சி, இட ஒதுக்கீடு அனைத்தும் வீண்.

மாரிதாஸ் ஆனாலும், மதன் ஆனாலும், சீமான் ஆனாலும் ஏன் கமலகாசன் ஆனாலும் தமிழகத்தில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்க முதலில் பெரியாரயே பயன்படுத்துவர். மாரி அண்ணன் மட்டும் விதி விலக்கு என்றாலும் அவரும் ஆரம்ப காலத்தில் கம்யூனிச கொள்கையை வைத்தே கடையை ஆரம்பித்தார்.

“மோடியை ஏன் ஆதரிக்கிறேன்”, “ரஜினியின் முதல்வர் வேட்பாளர்” என்று களத்திற்கு வரும் நீங்கள் ஒரு இரண்டு நாளைக்கு சமூக வலைதள கண்டெண்டாக இருக்க முடியுமேதவிர அப்படி ஒன்றும் பெரிய அதிர்வை ஏற்படுத்தி விட முடியாது.

இங்கு ஏற்கனவே விவசாயி மற்றும் விளக்கை காண்பித்து விபூதி அடி வாங்கிய கூட்டமே அதிகம். உங்களை போன்று ஆயிரம் சங்கிகளை பார்த்த மண் இது, மலர் இங்கு ஒருநாளும் மலராது. வழக்கம் போல் மாறுவேடத்தில் வராமல் நேரடியாக சங்கி என்று வெளியே வரும் உங்கள் நேர்மை கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

வாழ்த்துகள்.