பிரியமுடன் பிரியாணி…

நண்பர்களே ஒன்று தெரியுமா? உலகில் ஈகைக்கு என்றே ஒரு திருநாள் உள்ளது என்றால் அது ரம்ஜான் திருநாள் தான். மதங்களை கடந்து அனைவரும் கொண்டாட வேண்டிய விழா இது.

எத்தனையோ பிரியானிகள் இருந்தாலும் ரம்ஜான் பிரியாணியில் மட்டும் தான் இஞ்சி பூண்டுடன் ஈகையும் சேர்த்து சமைக்கப்படுகிறது.

நான் கருப்புசட்டை, எனக்கு ஏசுவானலும் அல்லாவானலும் தேவையில்லாத ஆணி தான். இருந்தாலும், கிடா வெட்டி தன் மதம், சாதிக்குள்ளே சமைத்து சாப்பிடும் கறிசோறை விட, அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும் ரம்ஜான் பிரியானிக்கே சுவை அதிகம்.

அனைத்து இசுலாமிய மற்றும் இசுலாமியர் அல்லாத நண்பர்களுக்கும் ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

அஃறிணை மனிதர்கள்

சங்கி நண்பர் ஒருவர் இந்த படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து சுய இன்பம் அடைந்து கொண்டார். இதில் வியப்படைய ஒன்றும் இல்லை, இயல்பாக இருக்கும் சங்கிதணம்.

இந்த படத்தில் “அதுதான் ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது, அதாவது திமுகவினர் தலைவர் ஸ்டாலின் அவர்களை அது என்று அஃறிணையில் அழைப்பதாக அவர் எள்ளலுடன் பதிவிட்டு இருந்தார். ஒரு நிமிடம் அந்த படத்தை பார்த்து அதில் உள்ள வரிகளை முழுமையாக படிக்கவும். முழுக்க முழுக்க பேச்சு வழக்கில் எழுதப்பட்டு உள்ளது.

இதில் அது தான் ஸ்டாலின் என்று கூறுவது அப்படி செய்பவர் தான் ஸ்டாலின் என்று பொருள்படும். தவிர யாரும் தலைவரை தரம் தாழ்த்தும் நோக்கத்தோடு பதிந்திருக்க வாய்ப்பு இல்லை. எப்படியோ திமுக என்னும் கட்சியை விமர்சனம் செய்ய வேண்டும், உங்களின் அரசியல் அறிப்பிர்க்கு திமுக தான் தொக்காட்டான் காய்.

மாவட்ட வாரியாக கொரோனா சோதனை செந்தவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியிட எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அதனை மதிக்காமல், தமிழகம் கொரோனாவை சிறப்பாக கையாள்கிறது என்று எடப்பாடி அடிமை அரசு கூற, அதற்கு ஒரு விமர்சனம் வைக்க துப்பு இல்லை, நடந்தே சொந்த ஊர் செல்லும் வடநாட்டு மக்களுக்கு ஆதரவாக ஒரு பதிவு இல்லை, அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசை கண்டித்து ஒரு விமர்சனம் இல்லை, எதோ குடும்ப கட்டுப்பாடு செய்த பன்றி போல் அவசர அவசரமாக தைய தக்க என்று குதிக்கு கொண்டு திமுக மீது விமர்சனம்.

அதே சங்கி நண்பர், சென்ற வாரம் அதிமுக அடிமைகளால் ஒரு குழந்தை அநியாயமாக எரித்து கொல்லப்பட்டார், அதற்கு கண்டனம் தெரிவித்து பதிந்த அவர் மறந்தும் அதிமுக பெயரை குறிப்பிடவில்லை. அப்போதே அதை பற்றி பேசி இருந்தால் இதை வைத்தும் அரசியல் செய்வீர்களா என்பார்கள். என்ன தான் உங்கள் நோக்கம்? கேட்டால் நான் சங்கி இல்லை என்பார் பிறகு யார் சார் நீங்க யாருக்கு உங்கள் ஆதரவு என்றால், பல்லை காட்டும் ஸ்மைலி போட்டுவிட்டு ஓடிவிடுவார். தன்னை நடுநிலை நக்கியாகவே முன் நிறுத்திக்கொள்ள நினைப்பர். இது அந்த தனி நபருக்கு மட்டும் அல்ல அவரை போன்ற பல பல எலைட் சங்கிகளுக்கும் பொருந்தும்23

கத்தோலிக்க சங்கிகள்

அங்கு காவி இங்கு வெள்ளை அவ்வளவே வித்தியாசம், இங்கு சாதிகள் ஏராளம். சிலர் கேட்க கூடும் இப்பொழுது எல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா அதுவும் கிறிஸ்டியன்ல என்று. கண்டிப்பாக இங்கும் சாதிகள் பார்க்கிறார்கள். சாதி மட்டும் அல்ல நல்ல நேரம், வாஸ்து இன்னும் ஒரு படி மேலே போய் சிலர் ஜாதகம் கூட பார்க்கிறார்கள். ஆனால் சமாதானம் என்கிற வார்த்தையை மட்டும் சொல்லி பூசி மொழுகி விடுகிறார்கள்.

நானும் கலப்பு மனம் தான் செய்தேன் ஆனால் உங்கள் கிறித்தவ மதம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏன்? மாற்று மதத்தினரை திருமணம் செய்ய கூடாது என்று உங்கள் புனித நூலில் எழுதி உள்ளதா? மணமகளை மதம் மாற்றினால் தான் திருமணம் செய்து வைப்போம் என்று சொல்லுகிறார்களே, உங்கள் மதத்திற்கு இப்படி வம்படியாக மாற்றி என்ன செய்ய போகிறீ்கள். எண்ணிக்கையை கூட்டி காட்டவா? எத்தனையோ பெண்கள் உங்கள் மூடதனத்தால் உங்கள் மத வெறியால் பிறந்த வீட்டில் ஒரு பெயரோடும் புகுந்த வீட்டில் ஒரு பெயரொடும் இருக்கிறார்கள். இன்னமும் பல மேரிகள் மாரி அம்மனை தான் வணங்குகிறார்கள்.

என்னுடைய உறவினர் சில மாதங்களுக்கு முன்னர் இறந்து போனார், அவர் இறந்தது சனி கிழமை, அது போதும் ஒரு கோழியை உயிரோடு பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டார்கள். அட அரைகுறை அறிவுள்ள கத்தோலிக்க சமூகமே உங்கள் பரம பிதா இப்படி தான் புதைக்க உங்களுக்கு கற்றுத்தந்தாரா? அந்த கோழியை கொன்று புதைத்தாலும் ஒரு நிமிட வலியோடு போய் இருக்கும். இரக்கம் கெட்ட இவர்கள் தான் ஆண்டவரே இரக்கமாயிரும் என்கிறார்கள். எப்படி இரக்கம் காட்டுவார் உங்கள் ஆண்டவர்.

நற்கருணை – கடவுளின் உடலும், இரத்தமும். இந்த அற்ப உணவு முரட்டு கிறித்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கபடுமாம். மாற்று மதத்தினர் பெற்றால் அது பாவமாம், இந்த கொடுமையை ஒலி பெருக்கி வாயிலாக வேறு சொல்வார்கள். ஒரு மாற்று மதத்தை சேர்ந்தவன் எதற்கு உங்கள் கோவிலுக்கு வர போகிறாள், ஒருவேலை வருகிறான் என்றால் நம்பி வருகிறான் என்று தானே பொருள். அப்படி அவர்களை விளக்கி வைப்பதை உங்கள் இயேசுநாதர் சிலுவையில் தொங்கியபடி பார்த்துக்கொண்டு தானே இருப்பார். முதலில் நற்கருணை வாங்கும் நீங்கள் அனைவரும் மனிதர்களா என்று சோதனை செய்யுங்கள் பிறகு கிறிஸ்தவர்களா என்று ஆராய்ச்சி செய்வோம்.

பாவமன்னிப்பு – உலகில் இது போன்ற ஒரு அயோக்கியத்தனம் வேறு இல்லை. உறுத்தலாக இல்லை, பண்றது எல்லாம் அயோக்கிய தனம் கடைசியாக போய் ஒரு பாவமன்னிப்பு எல்லாம் சரியா போச்சு. அதும் அதை ஆண்டவரிடம் சொல்ல கூடாதாம் பாதிரியாரிடம் தான் சொல்ல வேண்டுமாம். இது எப்படி மனிதனை திருத்தும், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது தான் பாவம் செய்ய தூண்டும்.

திருப்பலி – இதுதான் ஆண்டவர் கற்பித்த முறையா? இது போன்று திருப்பலி நடந்ததாக பைபிளில் ஏதேனும் குறிப்பு உள்ளதா. அவர் எழுந்ததும் நாமும் எழ வேண்டும், அவர் உட்கார்ததும் நாமும் உக்கார வேண்டும். பிறகு அவர் பாட நாம் பாட… இதெல்லாம் ஒரு நாடகமாக தெரியவில்லையா? இதை எல்லாம் சரியாக செய்தால் தான் உங்கள் கடவுள் வருவார் என்றால் அவர் கடவுள் இல்லை கைக்கூலி. கோவில் வாசலில் இருக்கும் பிச்சை காரர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கி கொடுங்கள் திருப்பலி கொடுக்கும் நிம்மதி இதில் அதிகமாய் கிடைக்கும்.

இன்னும் நிறைய மனதினுள் முள்ளாய்,

நல்ல மதம் தானாய் பரவும், நாம் பரப்ப மதம் ஒன்றும் கிருமி அல்ல.

– ஆமென்

திரௌபதி, கர்ணன் மற்றும் ஆண்ட பரம்பரைகள்

முதல் கேள்வி திரௌபதி என்னும் பெண்ணை ஆதரிக்கும் நீங்கள் உங்கள் மனைவியை அல்லது உங்கள் மகளை அந்த இடத்தில் அதாவது ஐந்து ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதிப்பீர்களா?

ஆம் சம்மதிப்போம் என்றால் உங்களுடன் எனக்கு மாற்று கருத்து இல்லை. நீங்கள் ஆண்ட பரம்பரை என்று ஏற்றுக்கொள்கிறேன்.

ஒரு சிறு புராணம்,

திரௌபதி நீண்ட நாட்கள் திருமணமாகாமல் தவமிருக்கிராள். கண்ணன் அதாவது குளிக்கும் பெண்களின் உடைகளை திருடி, பொள்ளாச்சி சம்பவத்திற்கு முன்மாதிரியாக இருந்த கண்ணன் அவள் முன்னே தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்கிறான். அவளோ எனக்கு அன்பு, பாசம், வீரம், கொடை மற்றும் அறிவு அனைத்தும் உள்ளவன் கணவனாக வேண்டும் என்கிறாள்.

கண்ணன், அதற்கு அப்படிப்பட்ட ஆண்மகன் உலகில் ஒருவன் மட்டுமே உள்ளான், அவன் பெயர் கர்ணன் என்கிறான், திரௌபதி கர்ணன் மீது காதல் கொள்கிறாள். இந்த திருமணம் நடக்குமா? ஏனெனில் கர்ணன் சூத்திரன். கொலை வேண்டுமானாலும் செய்வோம் சூத்த்திரணுக்கு பொண்ணை கொடுக்க மாட்டோம் என்னும் சமூகம் இது.

ஆனால் என்ன நடந்தது, கண்ணன் ஒரு மாமா வேலையை செய்தான், ஒவ்வொரு குணநலன் ஒருவரிடயே அமைய பெற்ற ஐந்து ஆண்களை அழைத்து வந்து இவர்களை திருமணம் செய்துகொள் என்கிறான்.

இது எந்த வகையில் இது நியாயம். கொட்சயாக சொல்லவேண்டும் என்றால் இதற்கு பெயர் கூட்டி கொடுப்பது, சரி அது அவர்கள் பாடு.

எனக்கு புரியவில்லை இந்த திரௌபதி உங்கள் வீட்டில் உள்ள பெண். அவளுக்கு அப்படியா நீ ஆண்களை கூட்டி வந்து நிருத்துவாய்?

நாடக காதல் என படம் எடுக்கும் ஆண்ட பரம்பரை ஐந்தறிவு உயிரினங்களே, நீங்கள் ஜாதியை மறுக்க வேண்டும் என்று இப்படி படம் எடுக்குறீர்களா? இல்லை வளர்க்கவா? நீங்கள் சொல்லும் நாடக காதலில் வாழ்க்கையை தொலைத்த பெண்கள் பொள்ளாச்சியில் நிறைய இருக்கிறார்கள். அதனை பற்றி பேசும்போது நவ துவாரத்தயும் மூடிக்கொண்டு விடுகிறீர்கள் என்ன உங்கள் மன நிலை.

எங்களுக்கு எங்களின் ஜாதி மயிறுக்கு சமம். அதுவும் தலை மயிர் அல்ல.

உங்களுக்கு எப்படி?

தற்செயல் நிகழ்வா என தெரியவில்லை, மாரி செல்வராஜ் எடுக்கும் அடுத்த படத்தின் பெயர் கர்ணன். இந்த கர்ணன் உங்கள் திரௌபதியின் கேள்விக்கு பதில் சொல்லுவான்.

குரோம்பேட்டை டூ அண்ணாநகர் அரசியல்.

என்ன இது சென்னை தானா? வீதிக்கு வீதி டாஸ்மாக் இல்லயே, என்று தேடிக்கொண்டே சென்றால் அதோ அந்த மூளையில் ஒன்றே ஒன்று இருக்கிறது, அதுவும் அருகிலேயே காவல் நிலையமாம், எப்படி சரக்கடித்து முடித்துவிட்டு பிரைடு ரைஸ் கடை காரனிடம் சண்டை இழுப்பது என்று புலம்பிகொண்டே நகர்ந்தார் அந்த தமிழக பொருளாதாரத்தில் மீது அக்கறை கொண்ட குடிமகன்.

ஆம் நான் பேசிக்கொண்டு இருப்பது அண்ணா நகரை பற்றி தான். சரி அப்படியே கொஞ்சம் குரோம்பேட்டை பக்கம் வருவோம்.

மூன்று கிலோமீட்டர் சுற்றளவு, 6 டாஸ்மாக் ஒரே ஒரு பொது கழிப்பிடம் அதுவும் வாரம் ஒருமுறை கண்டிப்பாக சுத்தம் செய்வார்கள். ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் ஒன்றாக அமைய பெற்ற எழை மக்களின் சொர்கம். உங்களிடம் 5 ரூபாய் இருந்தால் சேத்துப்பட்டு வரை செல்லலாம், 10 ரூபாய் இருந்தால் செங்கல்பட்டு வரை செல்லலாம். இயற்கையாகவே போக்குவரத்து மிக சிறப்பாக அமைய பெற்ற ஒரு குட்டி சிங்கப்பூர் ( இது எல்லாம் ஓவர் என்பவர்கள் வெள்ளிக்கிழமை பல்லாவரம் சந்தைக்கும் சனிக்கிழமை சரவணா ஸ்டோருக்கும் வரவும் ).

சரி அப்போது அண்ணா நகர் குட்டி சிங்கப்பூர் இல்லையா? என்றால் இல்லை, ஒருக்காலும் இல்லை வேண்டும் என்றான் பெரிய மைலாப்பூர் என்று வேண்டுமானால் சொல்லலாம். மிக நேர்த்தியான தெருக்கள், குப்பைகள் இல்லா குப்பை தொட்டிகள், தடை இல்லா மின்சாரம், ஆள் நடமாட்டமே இல்லா தெருக்கள், டவுசர் போட்டுக்கொண்டு கீரை வாங்க வரும் அங்கில்கள், சேலை கட்டி ரீபொக் சூ போட்டு வாக்கிங் போகும் ஆண்ட்டி கள்.

சரி இதை வைத்து என்ன அரசியல் பேச போகிறாய் என்று கேட்க போகிறீர்களா?

ஆம் இங்கு அறிய வகை எழைகள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் தெருக்களின் பெயர்களை கேளுங்கள், எண்ணிலும் , எழுத்திலும் இருக்கும், தெருக்களுக்கு பெயர் வைக்க கூட அவர்களிடம் தலைவர்கள் இல்லை, அவர்களில் தலைவர்கள் என்று யாரும் இல்லை ஒரு சிலரை தவிர. மேலும் அவர்களுக்கு திராவிட தலைவர்களின் பெயரை தெருக்களுக்கு வைக்க மனமும் வரவில்லை, வராது. ஆம் உருத்த தானே செய்யும். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ராஜாஜி, உவேச, சுப்ரமணியன் (பாரதி).

அப்படியே குரோம்பேட்டை பக்கம் வாருங்கள் இங்கு ராஜாஜி பெயரிலும் தெரு உண்டு, பக்தவச்சலம் பெயரிலும் தெரு உண்டு. சாஸ்திரிக்கும் தெரு உண்டு, காந்திக்கும் தெரு உண்டு, பெரியாருக்கும் ஒரு தெரு, நேருவுக்கும் ஒரு தெரு. 90% தெருக்களின் பெயர் தலைவர்களின் பெயரை தான் தாங்கி நிற்கும். இவ்வாறு தலைவர்களின் பெயரை வைப்பது வெறும் விளம்பரம் அல்ல, அது நன்றி கடன். உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதி அல்லவா, உழைக்கும் மக்கள் ஒருநாளும் நன்றி மறக்கமாட்டார்கள்.

அரியவகை ஏழைகள் அதிகம் வசிக்கும் நடுவங்கரை பகுதிக்கு அண்ணாவின் பெயரை வைத்து நொடிக்கு ஒருமுறை நினைவுபடுத்தியது தான் திராவிட கழகங்களின் ஆக சிறந்த சாதனை. பார்ப்போம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த தெருக்கள் எண்ணயும், எழுத்தயும் சுமந்து நிற்கும் என்று.

தெருக்களின் பெயர் வெறும் பெயர் அல்ல, அது ஒரு வரலாறு, ஒரு நன்றிக்கடன்.

கோனைஸ் 20 ரூபாய்…!!

ஆம் உடலுறவு பற்றி, காம அறிவு பற்றி தந்தையோ, தாயோ நேரடியாக பேச முடியாது. அதற்கு தான் அவர்கள் கோவிலுக்கு செல்லும் போது அந்த சிற்பங்களை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என நம் முன்னோர்கள் அவ்வாறு அமைத்தனர் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே,

இந்த சிற்பம் என்ன சொல்கிறது, ஆணும் பெண்ணும் களவில் ஈடுபடுகிறார்கள், மற்ற இரண்டு பெண்களுக்கும் அங்கு என்ன வேலை?

தயவு செய்து விளக்குங்கள். ஒருவேளை அது அரசன் அவனுக்கு துணையாக அந்தபுற அழகிகள் இருக்கிறார்கள் என்று உன் பதில் வரும் அப்படி என்றால், உன்னை விட்டுவிடு உன் சகோதரியின் கணவன் அல்லது உன் அப்பா இவ்வாறு செய்தால் நீ பொறுத்து கொள்வாயா?

சரி எதாவது விளக்கம் சொல்லி தப்பிக்க முயற்சி செய்வீர்கள். கர்ப்பணயாக துணை நிற்கும் பெண்கள் ஒருவேளை உன் மனைவியாக இருந்தால், உன் அம்மாவாக, உன் தங்கை அக்காவாக இருந்தால் இவ்வாறு தான் கடந்து செல்வாயா?

90 ml என்று ஒரு படம் வந்தது பார்த்து இருக்கிறீர்களா? உண்மையில் அது சமூகம் சார்ந்த படம் ஆனால் அதை அவ்வாறு சொன்னால் பார்க்க மாட்டார்கள் விளம்பரம் தேவை, அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்டது காமம், பெண்கள் கவர்ச்சியாக பேசிக்கொள்ள வேண்டும் அவ்வாறு பேசினால் படத்தில் சிறப்பு காட்சிகள் அதிகம் இருக்கும் என்று அனைவரும்( ஆம் இங்கு அனைவரும் என்பது அனைவரையும் படிக்கும் உங்களையும் ) என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அது அவகளின் நோக்கம் செய்தார்கள். நீங்களும் நாக்கை தொங்க போட்டு கொண்டு தான் பார்த்து இருப்பீர்கள்( நானும் பார்த்தேன்).

ஆனால் பார்ப்பனர்கள் உங்களை திசை திருப்பவே இவ்வாறு செய்தான், நம்ப புடிகிறதா? உங்களால் கருவறைக்குள் செல்ல முடியுமா? நீ என்ன தான் பேண்ட பரம்பரை ஆயினும் நீ அவனுக்கு சூத்திரன். உன்னை கோவிலுக்கு வெளியே சுற்ற வைக்க அவன் செய்த சூழ்ச்சி தான் இந்த வக்கிரமம். இன்று வரை சுற்றிக்கொண்டு தான் இருக்கிறாய்.

காம உணர்ச்சி அனைவருக்கும் இயல்பானது, அதனை புனிதம் என்று நீங்கள் சொல்லும் கோவிலில் வைத்து அதற்கு ஒரு வியாகியானம் பேசுவது தான் நகைச்சுவை.

அகற்றி எறியுங்கள் அந்த அக்கிரமங்களை இளைய தலைமுறைக்கு உங்களை விட அனைத்தும் தெரியும். அப்பறம் இதற்கும் தலைபிற்கும் சம்பந்தம் இல்லை.

திருக்குறளும், ஆங்கிலமும் சங்கிகளின் சங்கிஸ்க்கான் யுத்தியும்.

இறுதி சுற்று படத்தில் ஒரு காட்சி வரும், சங்கிஸ்க்கானை பற்றி. அவன் எதிரிகளை விட எதிரிகளின் ஆயுதத்தின் மீதே குறி வைப்பான். ஆயுதங்கள் அனைத்தயும் அழித்தப்பின் எதிரிகளை மிக எளிதாக வென்று விடுவான். இந்த யுத்தியை தான் சங்கிகள் இப்போது கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சில நாட்களாக வள்ளுவர் காவி உடையில் ஜொலிக்கிறார். பூனூல் பட்டை நாமம் ருத்ரச்சம் வேறு. இதற்கு அவரை சானியில் அடித்தது பரவாயில்லை போல் தோன்றுகிறது.

சரி ஒருவன் மத சார்பு உடையவனாக ஏன் இருக்க கூடாது அதுவும் திருவள்ளுவர் ஏன் மத சார்பு உடையவராக இருக்க கூடாது? இருக்கலாம் கண்டிப்பாக இருக்கலாம் அது அவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அவரின் மீது நேற்று வந்த ஒரு மதத்தை திணிப்பது முட்டால் தனம்.

இந்து சனாதன கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டவன் வள்ளுவன், “பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றான், “உழவே தலை” என்றான். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்ற போது “தெய்வத்தால் ஆகாதேனினும்” என்று தெய்வத்தை சோதனை செய்தான். ஆம் வள்ளுவன் தன்னை எங்கும் கடவுள் மறுப்பாளன் என்று காட்டிகொள்ளவே இல்லை அதே போல் கடவுள் பற்றாலன் என்றும் சொல்லவில்லை.

நான் வியந்துபோன குறள்,

கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம், எல்லாம் மழை.

நன்றாக கவனியுங்கள் இங்கு எடுப்பது என்னும் சொல் கொடுக்கும் பொருளில் வருகிறது நேர் எதிரான பொருள் உடைய சொல்லை வள்ளுவர் நேரடி பொருளாக பயன்படுத்தி இருக்கிறார்.

சரி அது என்ன சங்கிஸ்கான் உத்தி. ஆம் இங்கு காவி சாயம் பூச வேண்டும் என்பது அவர்களின் பலநாள் கனவு. அதற்கு அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

புதிய கல்வி கொள்கையை வைத்து சமஸ்கிருத மொழியை திணிக்க அவர்கள் கையில் எடுத்துக்கொண்டது நாட்டிற்க்கு ஒரு பொது மொழி என்பது, அதற்காக நாம் கையில் இருக்கும் ஆங்கிலத்தை பறிக்க பார்த்தார்கள், மீண்டும் முயற்சி செய்வார்கள் கண்டிப்பாக. ஆம் ஆங்கிலமும் தான் நம் ஆயுதம் அவர்கள் எதிரிகளை விட அவர்களின் ஆயுதத்தை அழிப்பது தான் முதல் இலக்கு. இப்போது திருக்குறள் மீது அவர்கள் கவனம் சென்றுள்ளது.

வள்ளுவனுக்கு காவி, என்ன சொல்லி புரிய வைப்பது இந்த மர மண்டைகளுக்க்கு, அவர் எதிர்த்ததே உங்கள் வருறாசிரமத்தை தான். பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவன் வள்ளுவன்.

என்னதான் கலர் கலராக வண்ணம் பூசினாலும் இங்கு தாமரை மயிரை தான் மலரும் என்பது எழுதப்படாத விதி.

பொக்கிஷங்கள்

ஒரு நாள் நானும் என் பையனும் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தோம், அப்போது அவனுக்கு ஏறத்தாழ ஒன்றரை வயது. எழுந்து நடக்க முயலும் பருவம். ஆனால் அப்போதும் கொஞ்சம் துரு துரு என்று தான் இருப்பான்.

ஒளிந்து பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தோம். தவந்து போய் ஒரு அறைக்குள் ஒளிந்துகொண்டு அப்பா அப்பா என்றான். நானும் அவனை தேடுவது போல் தம்பி எங்க காணும் என்று தேடினேன். அவன் ஒளிந்துகொண்டு இருந்த அறையின் கதவு தானியங்கி கதவு உள்ளே சென்று பூட்டிக்கொண்டான். அவனுக்கு திறக்க தெரியவில்லை. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர நானும் பேசிக்கொண்டே சென்றுவிட்டேன். அங்கு அவன் நின்றுகொண்டு அப்பா அப்பா அன்று அழைத்துக்கொண்டு இருந்தான்.

சிறிது நேரத்தில் என் மனைவி என்னிடம் வந்து தம்பி உள்ள மாட்டிக்கொண்ட விசயத்தை சொல்ல ஒரு நிமிடம் படபடப்பு தொற்றிக்கொண்டது. கதவை உள்பக்கமாக தான் திறக்க முடியும், அவன் கதவின் அருகிலேயே நிற்கிறான். சிரித்துகொண்டு இருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அழ ஆரம்பித்தான். கதவை தள்ளி உடைத்து திறக்க முடியாது அவன் கதவின் அருகிலேயே நிற்கிறான். பரபரப்பு பக்கத்து விட்டில் இருந்து கூட வந்து முயற்சி செய்தார்கள். என்ன செய்வது என்றே புரியவில்லை.

ஒரு யோசனை வந்தது. அறையின் பின் புறம் சென்று ஜன்னல் கதவை உடைத்து அவனை என்பக்கமாக அழைத்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம். அவனும் அப்பா என்று ஜன்னலின் பக்கம் வந்தான். பிறகு கதவை உடைத்து திறந்தோம். இதனை இங்கு பகிர்வதற்கு காரணம் விளம்பரம் அல்ல. ஒருவேளை அங்கு அந்த அறையில் ஜன்னல் இல்லாமல் இருந்தால்? அன்று முழுவதும் யாரிடமும் பேசவில்லை தொலைபேசியை அனைத்து விட்டு என் பையனுடன் மட்டுமே இருந்தேன். மீண்டு வர எனக்கு சில நாட்கள் ஆனது.

ஆனால் இன்று… “தம்பி அம்மா இருக்கேன் பயப்டாத தம்பி” என்று அம்மா அழைக்கிறாள் அவனோ “சரிமா” என்கிறான். அந்த குழந்தை நம்பிக்கொண்டு தானே இருந்து இருக்கும். எந்த பெற்றோரும் பிள்ளைகளை காயப்படுத்த வேண்டும் என நினைப்பதில்லை. சில கவன குறைவு தான். இந்த ஒரு மரணம் நமக்கு ஒரு ஆயிரம் பாடத்தை கற்று தந்துவிட்டது. தம்பி சுர்ஜித் மரணம் கடைசி விபத்தாக இருக்க வேண்டும்.

ஒன்றை மனதில் கொள்வோம். வருமுன் காப்பதே சிறந்தது. உங்கள் குழந்தைகள் மீது சபதம் எடுப்போம்.

1. கண்டிப்பாக உனக்காக நேரம் செலவு செய்வேன்.

2. உனக்கு தொலைபேசியை தர மாட்டேன் அதற்கு பதில் உனக்கு புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகள், கிண்டில் போன்ற அறிவு சார்ந்த பொருட்களை வாங்கி கொடுப்பேன்.

3. உன் மீதும் உன் சுற்றுப்புறத்தில் நிகழும் மாற்றத்தின் மீதும் எப்போதும் என் கவனம் இருக்கும்.

4. நம் விட்டின் முகவரியையும் என் தொலைபேசி எண்ணயும் உனக்கு மனப்பாடம் செய்ய வைப்பேன்.

5. உன் நண்பர்களுடனும் தொடர்பில் இருப்பேன்.

6. பருவம், காதல், காமம், இனகவற்சி, மற்றும் உடலின் மாற்ற கூறுகள் தொடர்பாக வெளிப்படையாக பேசுவேன்.

7. உனக்கு என்னிடம் விவாதம் செய்யும் உரிமையை அளிப்பேன்.

8. உன்னை யாரிடமும் ஒப்பிட மாட்டேன்.

9. உன்னிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முயற்சி செய்வேன்.

10. தோல்விகளை தாங்கிக்கொள்ள பயிற்சியும், வெற்றிகளை அடக்கத்தொடு அணுகும் அணுகுமுறையும் உனக்கு கற்றுக் கொடுப்பேன்.

இது உணக்காகவும் உனக்காக வாழும் எனக்காகவும் நான் எடுக்கும் சபதம்.

பிழை இருந்தால் மன்னியுங்கள், இதுதான் இப்போதைய தேவை. குழந்தைகள் பொக்கிஷங்கள். பாதுகாப்போம். பாடம் கற்போம்.