திரௌபதி, கர்ணன் மற்றும் ஆண்ட பரம்பரைகள்

முதல் கேள்வி திரௌபதி என்னும் பெண்ணை ஆதரிக்கும் நீங்கள் உங்கள் மனைவியை அல்லது உங்கள் மகளை அந்த இடத்தில் அதாவது ஐந்து ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதிப்பீர்களா?

ஆம் சம்மதிப்போம் என்றால் உங்களுடன் எனக்கு மாற்று கருத்து இல்லை. நீங்கள் ஆண்ட பரம்பரை என்று ஏற்றுக்கொள்கிறேன்.

ஒரு சிறு புராணம்,

திரௌபதி நீண்ட நாட்கள் திருமணமாகாமல் தவமிருக்கிராள். கண்ணன் அதாவது குளிக்கும் பெண்களின் உடைகளை திருடி, பொள்ளாச்சி சம்பவத்திற்கு முன்மாதிரியாக இருந்த கண்ணன் அவள் முன்னே தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்கிறான். அவளோ எனக்கு அன்பு, பாசம், வீரம், கொடை மற்றும் அறிவு அனைத்தும் உள்ளவன் கணவனாக வேண்டும் என்கிறாள்.

கண்ணன், அதற்கு அப்படிப்பட்ட ஆண்மகன் உலகில் ஒருவன் மட்டுமே உள்ளான், அவன் பெயர் கர்ணன் என்கிறான், திரௌபதி கர்ணன் மீது காதல் கொள்கிறாள். இந்த திருமணம் நடக்குமா? ஏனெனில் கர்ணன் சூத்திரன். கொலை வேண்டுமானாலும் செய்வோம் சூத்த்திரணுக்கு பொண்ணை கொடுக்க மாட்டோம் என்னும் சமூகம் இது.

ஆனால் என்ன நடந்தது, கண்ணன் ஒரு மாமா வேலையை செய்தான், ஒவ்வொரு குணநலன் ஒருவரிடயே அமைய பெற்ற ஐந்து ஆண்களை அழைத்து வந்து இவர்களை திருமணம் செய்துகொள் என்கிறான்.

இது எந்த வகையில் இது நியாயம். கொட்சயாக சொல்லவேண்டும் என்றால் இதற்கு பெயர் கூட்டி கொடுப்பது, சரி அது அவர்கள் பாடு.

எனக்கு புரியவில்லை இந்த திரௌபதி உங்கள் வீட்டில் உள்ள பெண். அவளுக்கு அப்படியா நீ ஆண்களை கூட்டி வந்து நிருத்துவாய்?

நாடக காதல் என படம் எடுக்கும் ஆண்ட பரம்பரை ஐந்தறிவு உயிரினங்களே, நீங்கள் ஜாதியை மறுக்க வேண்டும் என்று இப்படி படம் எடுக்குறீர்களா? இல்லை வளர்க்கவா? நீங்கள் சொல்லும் நாடக காதலில் வாழ்க்கையை தொலைத்த பெண்கள் பொள்ளாச்சியில் நிறைய இருக்கிறார்கள். அதனை பற்றி பேசும்போது நவ துவாரத்தயும் மூடிக்கொண்டு விடுகிறீர்கள் என்ன உங்கள் மன நிலை.

எங்களுக்கு எங்களின் ஜாதி மயிறுக்கு சமம். அதுவும் தலை மயிர் அல்ல.

உங்களுக்கு எப்படி?

தற்செயல் நிகழ்வா என தெரியவில்லை, மாரி செல்வராஜ் எடுக்கும் அடுத்த படத்தின் பெயர் கர்ணன். இந்த கர்ணன் உங்கள் திரௌபதியின் கேள்விக்கு பதில் சொல்லுவான்.

Leave a Reply