திருக்குறளும், ஆங்கிலமும் சங்கிகளின் சங்கிஸ்க்கான் யுத்தியும்.

இறுதி சுற்று படத்தில் ஒரு காட்சி வரும், சங்கிஸ்க்கானை பற்றி. அவன் எதிரிகளை விட எதிரிகளின் ஆயுதத்தின் மீதே குறி வைப்பான். ஆயுதங்கள் அனைத்தயும் அழித்தப்பின் எதிரிகளை மிக எளிதாக வென்று விடுவான். இந்த யுத்தியை தான் சங்கிகள் இப்போது கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சில நாட்களாக வள்ளுவர் காவி உடையில் ஜொலிக்கிறார். பூனூல் பட்டை நாமம் ருத்ரச்சம் வேறு. இதற்கு அவரை சானியில் அடித்தது பரவாயில்லை போல் தோன்றுகிறது.

சரி ஒருவன் மத சார்பு உடையவனாக ஏன் இருக்க கூடாது அதுவும் திருவள்ளுவர் ஏன் மத சார்பு உடையவராக இருக்க கூடாது? இருக்கலாம் கண்டிப்பாக இருக்கலாம் அது அவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அவரின் மீது நேற்று வந்த ஒரு மதத்தை திணிப்பது முட்டால் தனம்.

இந்து சனாதன கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டவன் வள்ளுவன், “பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றான், “உழவே தலை” என்றான். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்ற போது “தெய்வத்தால் ஆகாதேனினும்” என்று தெய்வத்தை சோதனை செய்தான். ஆம் வள்ளுவன் தன்னை எங்கும் கடவுள் மறுப்பாளன் என்று காட்டிகொள்ளவே இல்லை அதே போல் கடவுள் பற்றாலன் என்றும் சொல்லவில்லை.

நான் வியந்துபோன குறள்,

கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம், எல்லாம் மழை.

நன்றாக கவனியுங்கள் இங்கு எடுப்பது என்னும் சொல் கொடுக்கும் பொருளில் வருகிறது நேர் எதிரான பொருள் உடைய சொல்லை வள்ளுவர் நேரடி பொருளாக பயன்படுத்தி இருக்கிறார்.

சரி அது என்ன சங்கிஸ்கான் உத்தி. ஆம் இங்கு காவி சாயம் பூச வேண்டும் என்பது அவர்களின் பலநாள் கனவு. அதற்கு அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

புதிய கல்வி கொள்கையை வைத்து சமஸ்கிருத மொழியை திணிக்க அவர்கள் கையில் எடுத்துக்கொண்டது நாட்டிற்க்கு ஒரு பொது மொழி என்பது, அதற்காக நாம் கையில் இருக்கும் ஆங்கிலத்தை பறிக்க பார்த்தார்கள், மீண்டும் முயற்சி செய்வார்கள் கண்டிப்பாக. ஆம் ஆங்கிலமும் தான் நம் ஆயுதம் அவர்கள் எதிரிகளை விட அவர்களின் ஆயுதத்தை அழிப்பது தான் முதல் இலக்கு. இப்போது திருக்குறள் மீது அவர்கள் கவனம் சென்றுள்ளது.

வள்ளுவனுக்கு காவி, என்ன சொல்லி புரிய வைப்பது இந்த மர மண்டைகளுக்க்கு, அவர் எதிர்த்ததே உங்கள் வருறாசிரமத்தை தான். பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவன் வள்ளுவன்.

என்னதான் கலர் கலராக வண்ணம் பூசினாலும் இங்கு தாமரை மயிரை தான் மலரும் என்பது எழுதப்படாத விதி.