நான் என்றும் உங்கள் மாணவன் தான்

வேதியியல் ஆய்வு கூடத்திற்கு செல்லும் போது எப்போதும் ஒரு பயம் இருக்கும், ராமானுஜம் சார் என்றாலே ஒரு பீதி இருக்கும் ஆனாலும் அது தேவை தான். அரசுப்பள்ளியில் இவ்வளவு நேர்த்தியான வேதியியல் ஆய்வுக்கூடம் இருக்கும் என்றால் அது உங்களின் ஆய்வுக்கூடம் தான், அது தான் உங்கள் அறை.

நான் பார்க்கும் வேலைக்கும், வேதியியலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றாலும் அந்த அறையில் வேதியியலை தாண்டி சுய ஒழுக்கம் என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டேன் சார். உங்களின் கண்டிப்பு தான் இன்று என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்தது.

இன்றும் ஆசிரியர் என்றால் அனிச்சை செயலாய் உங்கள் முகம் தான் வந்து நிற்கிறது. நீங்கள் வேதியியல் மேதை மட்டும் அல்ல எங்களின் வாழ்வியலின் குரு. உங்களிடம் கற்றதும் பெற்றதும் தான் எங்களை திறம்பட இயங்க வைக்கிறது.

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ராமானுஜம் சார், மீண்டும் சொல்கிறேன் நான் என்றும் உங்கள் மாணவன் தான்

Leave a Reply